| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 980 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (ஒருவரால் அழிக்க வொண்ணாத லங்கா புரியும் அதற்கும் அகழாகி ரக்ஷகமாயிருந்த தெற்கு ஸமுத்ரமும், இராவணனும், அவனுக்குத் துணையாயிருந்த ராக்ஷஸஜாதியடங்கலும் நாசமடையும்படி தனது கொடுமையான பராக்கிரமத்தைச் செலுத்திக் காரியஞ்செய்த ராஜாதி ராஜன் எழுந்தருளியிருக்குமிடம் வதரியாச்சிரமம்.) 3 | இலங்கையும் கடலும் அடலருந்திப் பின் இரு நிதிக் கிறைவனும் அரக்கர் குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும் சுடர் சுழன்ற விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி யென விரிந்து வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-3 | முன், Mun - ஸ்ரீராமாவதாரத்தில் இலங்கையும், Ilankaiyum - லங்காபுரியென்ன கடலும், Kadalum - (அதற்கு அகழான) தெற்கு ஸமுத்ரமென்ன அடல் அருதுப்பின் இரு நிதிக்கு இறைவனும், Adal Aruthuppin Iru Nidhikku Iraivanum - ஒருவராலும் வெல்ல முடியாத பலத்தையுடையனாய்ப் பெரிய நிதிகளுக்கு ஸ்வாமியான ராவணனென்ன அரக்கர் குலங்களும் கெட, Arakkar Kulangalum Keda - ராக்ஷஸஜாதியென்ன ஆகிய இவையெல்லாம் ஒழியும்படியாக கொடுதொழில் புரிந்த கொற்றவன், Koduthozhil Purindha Kotravan - கடுமையான காரியங்களைச் செய்தருளின மஹாப்ரபு (எவ்விடத்திலுள்ளா னென்றால்) கொழு சுடர் சுழன்ற விலங்கவில் உரிஞ்சி, Kozhu Sudar Suzhandra Vilangavil Urinji - ஸூர்யன் சுழன்று வரப்பெற்ற (மேரு) மலை வரைக்கும் சென்று முட்டி மேல் நின்ற விசும்பில், Mel Nindra Visumbil - மேலேயிருக்கிற ஆகாசத்திலே வெண் கொடி துகில் என விரிந்து, Ven Kodi Thugil Ena Virinthu - வெளுத்த த்வஜபடமென்ன லாம்படி பரந்து வலந்தரும், Valantharum - (வேகத்தாலே) மிடுக்கையுடையதும் மணி நீர், Mani Neer - அழகிய தீர்த்தத்தை யுடையதுமான கங்கையின், Gangaiyin - கங்கைநதியினுடைய கரை மேல், Karai Mel - கரையின்மேலுள்ள வதரியாச்சிராமத்து, Vathariyachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன். |