Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 980 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
980பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (ஒருவரால் அழிக்க வொண்ணாத லங்கா புரியும் அதற்கும் அகழாகி ரக்ஷகமாயிருந்த தெற்கு ஸமுத்ரமும், இராவணனும், அவனுக்குத் துணையாயிருந்த ராக்ஷஸஜாதியடங்கலும் நாசமடையும்படி தனது கொடுமையான பராக்கிரமத்தைச் செலுத்திக் காரியஞ்செய்த ராஜாதி ராஜன் எழுந்தருளியிருக்குமிடம் வதரியாச்சிரமம்.) 3
இலங்கையும் கடலும் அடலருந்திப் பின் இரு நிதிக் கிறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும்  சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி யென விரிந்து
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-3
முன், Mun - ஸ்ரீராமாவதாரத்தில்
இலங்கையும், Ilankaiyum - லங்காபுரியென்ன
கடலும், Kadalum - (அதற்கு அகழான) தெற்கு ஸமுத்ரமென்ன
அடல் அருதுப்பின் இரு நிதிக்கு இறைவனும், Adal Aruthuppin Iru Nidhikku Iraivanum - ஒருவராலும் வெல்ல முடியாத பலத்தையுடையனாய்ப் பெரிய நிதிகளுக்கு ஸ்வாமியான ராவணனென்ன
அரக்கர் குலங்களும் கெட, Arakkar Kulangalum Keda - ராக்ஷஸஜாதியென்ன ஆகிய இவையெல்லாம் ஒழியும்படியாக
கொடுதொழில் புரிந்த கொற்றவன், Koduthozhil Purindha Kotravan - கடுமையான காரியங்களைச் செய்தருளின மஹாப்ரபு (எவ்விடத்திலுள்ளா னென்றால்)
கொழு சுடர் சுழன்ற விலங்கவில் உரிஞ்சி, Kozhu Sudar Suzhandra Vilangavil Urinji - ஸூர்யன் சுழன்று வரப்பெற்ற (மேரு) மலை வரைக்கும் சென்று முட்டி
மேல் நின்ற விசும்பில், Mel Nindra Visumbil - மேலேயிருக்கிற ஆகாசத்திலே
வெண் கொடி துகில் என விரிந்து, Ven Kodi Thugil Ena Virinthu - வெளுத்த த்வஜபடமென்ன லாம்படி பரந்து
வலந்தரும், Valantharum - (வேகத்தாலே) மிடுக்கையுடையதும்
மணி நீர், Mani Neer - அழகிய தீர்த்தத்தை யுடையதுமான
கங்கையின், Gangaiyin - கங்கைநதியினுடைய
கரை மேல், Karai Mel - கரையின்மேலுள்ள
வதரியாச்சிராமத்து, Vathariyachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன்.