Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 979 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
979பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (பெருமாளையும் பிராட்டியையும் பிரிப்பதற்கு மாயமான் வடிவுகொண்டு வந்த மாரீசனை ஒழித்தபடியையும், ஆச்ரிதனான ஸுக்ரீவனுக்கு விரோதியான வாலியை ஒழித்தபடியையும் முன்னடிகளில் அருளிச் செய்கிறார்.) 2
கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன்
ஊனுடை யகலத்தடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வெம் மொருவன்
தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யா ச்சிராமத்துள்ளானே –1-4-2
கானிடை, Kaanidai - காட்டிலே
உருவை, Uruvai - (மாரீசனாகிய) மாயா மிருகததை
முன் கண்டு, Mun Kandu - கண்ணெதிரில் பார்த்து
சுடு சரம் துரந்து, Sudu Saram Thurandhu - (அதன் மேல்) தீக்ஷ்ணமான பாணத்தைப் பிரயோகித்தவனும்
கொடு தொழில் உரவோன், Kodu Thozhil Uravon - கொடுமையான தொழிலை யுடையனாய் பலசாலியான வாலியினுடைய
ஊன் உடை அகலத்து, Oon Udai Akalathu - மாம்ஸமான மார்விலே
அடு கணை குளிப்ப, Adu Kanai Kulippa - தீக்ஷ்ணமான பாணத்தை அழுத்தி
உயிர் கவர்ந்து, Uyir Kavarndhu - (அவனது பிராணனை அபஹரித்து
உகந்த, Ugantha - மகிழ்ந்தவனுமான
எம் ஒருவன், Em Oruvan - விலக்ஷணனான அஸ்மத்ஸ்வாமி (எவ்விடத்திலுள்ளா னென்றால்)
தேன் உடை கமலத்து அயனொடு, Then Udai Kamalathu Ayanodu - தேனையுடைய(திருநாபிக்) கமலத்தில் பிறந்த பிரமனோடு கூட
தேவர், Thevar - மற்றுமுள்ள தேவர்களும்
சென்று சென்று, Sendru Sendru - பலகால் வந்து
இறைஞ்சிட, Iraichida - வணங்கப் பெற்றதும்
பெருகு வானிடை முது நீர் கங்கையின் கரைமேல், Perugu Vaanidai Muthu Neer Gangaiyin Karameel - பெருகுகின்ற புராதனமாக ஆகாசகங்கைக் கரைமீது உள்ளதுமான
வதரி ஆச்சிராமத்து, Vadhari Aachiramaathu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருக்கிறான்.