Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 975 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
975பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து சென்று குறடேறும்போதே, சீ சீ, நட, நட” என்று துரத்தியடிப்பர்கள் ; வாசலை விடமாட்டாத சாபல்யத்தாலே ‘அம்மா! நான் உள்ளே வரவில்லை; தெருத்திண்ணையிலேயே கிடந்து போகிறேன்’ என்று விநயமாகச் சொல்லி உட்காரப் பார்த்தவளவில், ஈங்கிரேல்மின்’ என்று வெருட்டுவர்கள்;) 8
ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர்
உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால்
நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில்
வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-8
இருமி இளைத்தீர், Irumi Ilaiththir - “(ஐயங்கார்களே!) இருமலும் இளைப்புமாக ஆனீர்கள்;
உள்ளம் கூசியிட்டீர், Ullam Koosiyitthir - நெஞ்சு கூசப் பெற்றீர்கள்;
போமின், Pomin - அப்பால் ஒழிந்து போங்கள்
ஈ சி, Ee See - சீ சீ ;
ஈங்கு இரேல்மின், Eengu Irelmin - இங்கே இருக்கக்கூடாது;”
என்று பேசும், Endru Pesum - என்றிப்படி அவமரியாதையாகப் பேசுகிற
குவளை அம் கண்ணியர் பால், Kuvazhai Am Kanniyar Paal - கருநெய்தல் போன்ற அழகிய கண்ணையுடைய மாதர்களிடத்து
நாசம் ஆன பாசம் விட்டு, Naasam Aana Paasam Vittu - ஸ்வரூபநாசத்தை விளைக்க வல்ல ஆசாபாசத்தை விட்டுத் துலைத்து
நல் நெறி நோக்கல் உறில், Nal Neru Nookkal Uruil - நல்வழி போகப்பார்க்கும் பக்ஷத்தில்
வாசம் மல்கு தண்துழாயான் வதரி வணங்குதும், Vaasam Malku Thanthuzhaiyan Vadhari Vananguthum - பரிமளம் மிக்குக் குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம்.