Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 973 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
973பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (கிழத்தனத்தில் ஒருவார்த்தை சொல்ல ஆரம்பிக்கும்போதே தட்டித் தடுமாறிக் குதலைச் சொல்லாக வரும் ; அத்தோடு கூடவே கபமும் வந்து விழும் ; கூடவே இருமலும் வந்து சேரும் ; ஆக இவ் வளவால் சரீரமானது இன்னமும் அதிகமாக பலஹீனப்பட்டுவிடும்.) 6
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலே  சித்தம் வேறாய் பேசி அயரா முன்
அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே –1-3-6
எய்த்த சொல்லோடு, Eyththa Sollodu - பலஹீனமான பேச்சுடனே
ஈளை ஏங்கி, Eilai Aengi - கோழைவந்து தங்கப் பெற்று
இருமி, Irumi - இருமி
உடலம் இளைத்து, Udalam Ilaitthu - சரீரம் மெலிந்து
பித்தர் போல, Piththar Poala - பைத்தியம்பிடித்தவர்கள்போல
வேறு சித்தம் ஆய் பேசி, Veeru Siththam Aayi Paesi - விகாரப்பட்ட மனமுடையராய் வார்த்தை சொல்லி
அயரா முன், Ayara Mun - தளருவதற்கு முன்னே-,
அத்தன், Aththan - ஸர்வஸ்வாமியாய்
எந்தை, Endhai - எமக்குத் தந்தையாய்
ஆதிமூர்த்தி, Aadhimurthi - உலகத்திற்கு மூலக்கடவுளாய்
ஆழ் கடலை கடைந்த, Aazh Kadalai Kadaindha - (ஒரு காலத்தில் தேவர்களுக்காக) ஆழ்ந்த கடலைக் கடைந்தவனாய்
மைத்த ஜோதி, Maiththa Jothi - மைபோல் சாமமான புகரையுடையனான
எம்பெருமான், Emperumaan - எம்பெருமானுடையதான
வதரி  வணங்குதும், Vadhari Vanangudhum - ஸ்ரீபதரியை வணங்குவோம்.