| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 973 | பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (கிழத்தனத்தில் ஒருவார்த்தை சொல்ல ஆரம்பிக்கும்போதே தட்டித் தடுமாறிக் குதலைச் சொல்லாக வரும் ; அத்தோடு கூடவே கபமும் வந்து விழும் ; கூடவே இருமலும் வந்து சேரும் ; ஆக இவ் வளவால் சரீரமானது இன்னமும் அதிகமாக பலஹீனப்பட்டுவிடும்.) 6 | எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம் பித்தர் போலே சித்தம் வேறாய் பேசி அயரா முன் அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே –1-3-6 | எய்த்த சொல்லோடு, Eyththa Sollodu - பலஹீனமான பேச்சுடனே ஈளை ஏங்கி, Eilai Aengi - கோழைவந்து தங்கப் பெற்று இருமி, Irumi - இருமி உடலம் இளைத்து, Udalam Ilaitthu - சரீரம் மெலிந்து பித்தர் போல, Piththar Poala - பைத்தியம்பிடித்தவர்கள்போல வேறு சித்தம் ஆய் பேசி, Veeru Siththam Aayi Paesi - விகாரப்பட்ட மனமுடையராய் வார்த்தை சொல்லி அயரா முன், Ayara Mun - தளருவதற்கு முன்னே-, அத்தன், Aththan - ஸர்வஸ்வாமியாய் எந்தை, Endhai - எமக்குத் தந்தையாய் ஆதிமூர்த்தி, Aadhimurthi - உலகத்திற்கு மூலக்கடவுளாய் ஆழ் கடலை கடைந்த, Aazh Kadalai Kadaindha - (ஒரு காலத்தில் தேவர்களுக்காக) ஆழ்ந்த கடலைக் கடைந்தவனாய் மைத்த ஜோதி, Maiththa Jothi - மைபோல் சாமமான புகரையுடையனான எம்பெருமான், Emperumaan - எம்பெருமானுடையதான வதரி வணங்குதும், Vadhari Vanangudhum - ஸ்ரீபதரியை வணங்குவோம். |