Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 972 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
972பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (ஸம்ஸாரிகளுடைய காலக்ஷேபக்ரமத்தைப் பேசுகிறார். உடலில் வலிவு இருந்தகாலத்தில் ஒரு நல்ல காரியம் பண்ணியறியார்கள் ; விஷய போகங்கள் செய்வதற்கு எவ்வளவு நிஷித்த காரியங்கள் செய்ய வேணுமோ அவ்வளவும் செய்து தீருவர்கள்; இப்படியாக யௌவனபருவத் தைக் கழித்துவிட்டுக் கிழத்தனத்தில் வந்தவாறே அப்போதாவது இழந்த நாளைக்கு அநுதாபப்பட்டு ஏதாவது நன்மை தேடிக்கொள்ள விரும்புவார்களோ; அது கிடையாது;) 5
பண்டு காமரர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம்
உண்டவாறும் வாழ்ந்தவாரும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-5
பண்டு, Pandhu - இளம்பிராயத்தில்
காமர் ஆன ஆறும், Kaamar Aana Aarum - மாதர்கள் விரும்புதற்குத்தாம் உரியராக இருந்தபடியையும்
பாவையர்வாய் அமுதம் உண்ட ஆறும், Paavai Arvaai Amudham Unda Aarum - அம்மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினபடியையும்
வாழ்ந்த ஆறும், Vaazhntha Aarum - சிற்றின்பங்களில் அழிந்தபடியையும்
ஒக்க உரைத்து இருமி, Okka Uraiththu Irumi - சொல்லுவது இருமுவது, மறுபடியும் சொல்லுவது இருமுவது ஆக இப்படியாகி
தண்ட காலா, Thanda Kaala - தடியைக் காலாகக்கொண்டு
ஊன்றி ஊன்றி, Oonri Oonri - (அசக்தியினால் ஓரிடத்திலேயே) பலதடவை ஊன்றி
தள்ளி, Thalli - தடுமாறி
நடவாமுன், Nadavaamun - நடக்க நேருவதற்கு முன்னே
வண்டு பாடும் தண் துழாயான், Vandu Paadum Than Thuzhaayaan - (மதுவுக்காக வந்து) வண்டுகள் பாடுகிற திருத்துழாய் மாலையை யுடையனான எம்பெருமானது
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்