| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 971 | பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (பீளைசோர.)கிழத்தனத்தில் கண்கள் சுருங்கிப்போய் அவற்றில் நின்று பிளிச்சை பெருகவும், பித்தம் மேலிட்டுத் தலைசுற்றித் தள்ளம்பாறி நடக்கவும் நேர்தல் இயல்வு. அப்படி நேர்ந்தகாலத்து வதரி வணங்குதல் முடி யாத காரியமா தலால் அப்படி நேருவதற்கு முன்னமே அதனை வணங்குதல் நன்று . . 4 | பீளை சோர கண் இடுங்கி பித்தெழ முத்து இருமி தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன் காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே –1-3-4 | கண் இடுங்கி பீளை சோர, Kan Idungi Peelai Soora - கண்கள் பசையற்றுப் பிளிச்சை பெருகவும் பித்து எழ, Piththu Ezh - பித்தம் மேலிடும்படியாகவும் மூத்து, Moothu - கிழத்தனமடைந்து இருமி, Irumi - (க்ஷயரோகத்தாலே) இருமிக் கொண்டு தாள்கள் தம்மில் முட்டி நோவ, Thaalgal Thammil Mudi Nova - கால்கள் ஒன்றோடொனறு தாக்கி நோகும்படியாக தள்ளி நடவாமுன், Thalli Nadava Mun - தடுமாறி நடப்பதற்கு முன்னே-, அன்று, Anru - முன்னொரு காலத்தில் காளை ஆகி, Kaalai Aagi - இளம்பிள்ளையா யிருந்துகொண்டு கன்று மேய்த்து, Kandru Meyththu - கன்றுகளை மேய்த்து குன்று எடுத்து நின்றான், Kundru Eduthu Nindraan - (அவற்றுக்கு நேர்ந்த மழைத் தீங்கை யொழிப்பதற்குக்) கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்ற எம்பெருமானது வாளை பாயும் தண்தடம் சூழ்ந்த, Vaalai Paayum Thanthadam Soozhntha - வாளை மீன்கள் குதித்துப் பாய்கின்ற குளிர்ந்த குளங்கள் சூழ்ந்த வதரி, Vadhari - ஸ்ரீபதரியை வணங்குதும், Vananguthum - வணங்குவோம். |