Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 971 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
971பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (பீளைசோர.)கிழத்தனத்தில் கண்கள் சுருங்கிப்போய் அவற்றில் நின்று பிளிச்சை பெருகவும், பித்தம் மேலிட்டுத் தலைசுற்றித் தள்ளம்பாறி நடக்கவும் நேர்தல் இயல்வு. அப்படி நேர்ந்தகாலத்து வதரி வணங்குதல் முடி யாத காரியமா தலால் அப்படி நேருவதற்கு முன்னமே அதனை வணங்குதல் நன்று . . 4
பீளை சோர கண் இடுங்கி பித்தெழ முத்து இருமி
தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன்
காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே –1-3-4
கண் இடுங்கி பீளை சோர, Kan Idungi Peelai Soora - கண்கள் பசையற்றுப் பிளிச்சை பெருகவும்
பித்து எழ, Piththu Ezh - பித்தம் மேலிடும்படியாகவும்
மூத்து, Moothu - கிழத்தனமடைந்து
இருமி, Irumi - (க்ஷயரோகத்தாலே) இருமிக் கொண்டு
தாள்கள் தம்மில் முட்டி நோவ, Thaalgal Thammil Mudi Nova - கால்கள் ஒன்றோடொனறு தாக்கி நோகும்படியாக
தள்ளி நடவாமுன், Thalli Nadava Mun - தடுமாறி நடப்பதற்கு முன்னே-,
அன்று, Anru - முன்னொரு காலத்தில்
காளை ஆகி, Kaalai Aagi - இளம்பிள்ளையா யிருந்துகொண்டு
கன்று மேய்த்து, Kandru Meyththu - கன்றுகளை மேய்த்து
குன்று எடுத்து நின்றான், Kundru Eduthu Nindraan - (அவற்றுக்கு நேர்ந்த மழைத் தீங்கை யொழிப்பதற்குக்) கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்ற எம்பெருமானது
வாளை பாயும் தண்தடம் சூழ்ந்த, Vaalai Paayum Thanthadam Soozhntha - வாளை மீன்கள் குதித்துப் பாய்கின்ற குளிர்ந்த குளங்கள் சூழ்ந்த
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்.