| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 969 | பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) [முதுகுபற்றி.)கிழத்தனத்தில் நாலடி நடந்தாலும் பலஹீனத் தால் முதுகு நோகும்; ஒருகையாலே முதுகைப்பிடித்துக்கொள்ள வேண்டிய தாகும் ; முன் பக்கமாக வளைந்து விழாமைக்காக ஒரு தடியை ஊன்றிக்கொள்ள வேண்டியதாகும்; 2 | முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி விதிர் விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி இது வென்னப்பர் மூத்தவாறு என்று இளையவர் ஏசாமுன் மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2 | கை தலத்தால், Kai Thalathaal - ஒரு கையாலே முதுகு பற்றி, Mudhugu Patri - முதுகைப் பிடித்துக்கொண்டும் முன் ஒரு கோல் ஊன்றி, Mun Oru Kol Oonri - (மற்றொருகையாலே) முன்னே ஒரு கொம்பை ஊன்றிக் கொண்டும் விதிர்விதிர்த்து, Vithirvithirthu - (உடல்) நடுங்கியும் கண் சுழன்று, Kan Suzhndru - (லொக்குலொக்கென்ற) பெரிய த்வநியைக்கொண்டு இருமியும் இளையவர், Ilaiyavar - இளம்பெண்கள் (மோவாய்த் கட்டையில் கையை வைத்துக்கொண்டு) அப்பர் மூத்த ஆறு இது என் என்று ஏசா முன், Appar Mootha Aaru Ithu En Endru Aesa Mun - “இந்தப் பெரியவர் கிழத்தன மடைந்த விது என்ன விசித்திரம்!” என்று சொல்லிப் பரிஹஸிப்பதற்கு முன்னே, மது உண் வண்டு, Madhu Un Vandu - பூவில் தேனைப் பருகுகின்ற வண்டுகள் பண்கள் பாடும், Pangkal Paadum - இசை பாடப்பெற்ற வதரி, Vadhari - ஸ்ரீபதரியை வணங்குதும், Vananguthum - வணங்குவோம் |