திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 969 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
969பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) [முதுகுபற்றி.)கிழத்தனத்தில் நாலடி நடந்தாலும் பலஹீனத் தால் முதுகு நோகும்; ஒருகையாலே முதுகைப்பிடித்துக்கொள்ள வேண்டிய தாகும் ; முன் பக்கமாக வளைந்து விழாமைக்காக ஒரு தடியை ஊன்றிக்கொள்ள வேண்டியதாகும்; 2
முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி விதிர் விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி இது வென்னப்பர் மூத்தவாறு என்று இளையவர் ஏசாமுன் மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2
பதவுரை Show / Hide
கை தலத்தால், Kai Thalathaal - ஒரு கையாலே
முதுகு பற்றி, Mudhugu Patri - முதுகைப் பிடித்துக்கொண்டும்
முன் ஒரு கோல் ஊன்றி, Mun Oru Kol Oonri - (மற்றொருகையாலே) முன்னே ஒரு கொம்பை ஊன்றிக் கொண்டும்
விதிர்விதிர்த்து, Vithirvithirthu - (உடல்) நடுங்கியும்
கண் சுழன்று, Kan Suzhndru - (லொக்குலொக்கென்ற) பெரிய த்வநியைக்கொண்டு இருமியும்
இளையவர், Ilaiyavar - இளம்பெண்கள் (மோவாய்த் கட்டையில் கையை வைத்துக்கொண்டு)
அப்பர் மூத்த ஆறு இது என் என்று ஏசா முன், Appar Mootha Aaru Ithu En Endru Aesa Mun - “இந்தப் பெரியவர் கிழத்தன மடைந்த விது என்ன விசித்திரம்!” என்று சொல்லிப் பரிஹஸிப்பதற்கு முன்னே,
மது உண் வண்டு, Madhu Un Vandu - பூவில் தேனைப் பருகுகின்ற வண்டுகள்
பண்கள் பாடும், Pangkal Paadum - இசை பாடப்பெற்ற
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்