| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 94 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 9 | வெண் புழுதி மேல் பெய்து கொண்ட அளைந்ததோர் வேழத்தின் கருங்கன்றுபோல் தெண் புழுதி யாடித் திரிவிக் கிரமன் சிறு புகர் படவியர்த்து ஒண் போதலர் கமலச் சிறுக் காலுரைத்து ஒன்றும் நோவாமே தண் போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ–1-7-9 | திரிவிக்கிரமன்,Thirivikraman - (தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன் வெள் புழுதி,Vel puzhudi - வெளுத்த புழுதியை மேல் பெய்து கொண்டு,Mel peythu kondu - மேலே போகட்டுக் கொண்டு அளைந்தது,Alaindhathu - அளைந்ததாகிய ஓர் வேழத்தின் கரு கன்று போல்,Or vezhathin karu kanru pol - ஒரு கரிய குட்டியானை போல, தெள் புழுதி,Thel puzhudi - தெளிவான புழுதியிலே ஆடி,Aadi - விளையாடி சிறு புகர் பட,Siru pugar pada - சிறிது காந்தி உண்டாக வேர்த்துப் போய், வியர்த்து,Viyarndhu - வேர்த்துப் போய், போது,Podhu - உரிய காலத்திலே அலர்,Alar - மலர்ந்த ஒள்,Ol - அழகிய கமலம்,Kamalam - தாமரைப் பூவை ஒத்த சிறு கால்,Siru kaal - சிறிய பாதங்கள் உறைத்து,Uraithu - (ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்) ஒன்றும் நோவாமே,Ondrum novamae - சிறிதும் நோவாதபடி தண் போது கொண்ட,Than podhu konda - குளிர்ந்த புஷ்பங்களுடைய தவிசின் மீது,Thavisin meedhu - மெத்தையின் மேலே தளர்நடை நடவானோ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |