Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 921 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
921திருப்பள்ளியெழுச்சி || (ஸ்ரீ நஞ்சீயர் ) - முன்னில் பாட்டிலே- “’வயலுளிரிந்தன சுரும்பினம்” என்றது; இப் பாட்டிலே -போது வைகினால் உணரக் கடவதான பக்ஷிகளுமுணர்ந்தன என்கிறது. முன்னில் பாட்டில் உணர்ந்த வற்றுக்கும் இப் பாட்டிலுணர்ந்த வற்றுக்கும் பாகவத் ப்ரவணர்க்கும் ஸம்ஸாரி களுக்குமுள்ள வாசி போருங் காணும்.-வயலிலுள்ளவை போலன்றிறே; சோலையாய் அதிலே பூம் பொழிலா யிருக்கச் செய்தே உணருகிறன விறே. போது- வைகின -படி. 5
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே
பூ, poo - பூத்திரா நின்றுள்ள
பொழில்களின் வாய், pozhilkalin vaai - சோலைகளிலுள்ள
புட்களும், pudkalum - பறவைகளும்
புலம்பின, pulambina - (உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன;
போயிற்று, poiyitru - கழிந்தது;
புலரி, pulari - ப்ராத: காலமானது
புகுந்தது, pugundhadhu - வந்தது;
குண திசை, guna thisai - கீழ்த் திசையிலே
கனை, kanai - கோஷஞ்செய்கிற
கடல், kadal - கடலினுடைய
அரவம், aravam - ஒசையானது
கலந்தது, kalanthadhu - வியாபித்தது;
களி, kali - தேனைப் பருகிப் களிக்கின்ற
வண்டு, vandu - வண்டுகளானவை
மிழற்றிய, mizhatrrya - சப்தியா நிற்கிற
கலம்பகன் புனைந்த, kalambakan punaindha - பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட
அம், am - அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு, alankal todaiyal kondu - அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள், amarargal - தேவர்கள்
அடி இணை பணிவான், adi inai panivaan - தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக
புகுந்தனர், pugundhanar - வந்து நின்றனர்;
ஆதலில், aadhalil - ஆகையாலே
அம்மா, amma - ஸர்வ ஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில், ilangaiyar kon vazhipadu sei koyil - லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே
எம்பெருமான்!, emperumaan - அஸ்மத் ஸ்வாமியே!
பள்ளி எழுந்தருளாயே, palli ezhuntharulaye - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்