Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 911 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
911திருமாலை || (அவர்களுக்கு பர ஹிம்சை முதலிய கொடிய கருமங்களின் பலன் அனுபவிக்க வேண்டா என்கிறார்) 40
திரு மறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தராகில் மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவறக் கொன்று சுட்டிட் டீட்டிய வினையரேலும்
அருவினைப் பயனது உய்யார் அரங்க மா நகர் உளானே
thiru maru maarba,திரு மறு மார்ப - பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீவத்ஸமென்கிற மறுவையும் திரு மார்பிலே அணிந்துள்ளவனே
arangamaa nagarulaane,அரங்கமா நகருளானே!-; - இவை எல்லாம் அவதார சமயங்களிலே அன்றோ என்ன ஒண்ணாத படி
அவதாரத்தில் பிற்பாடர்க்கு ஆக வன்றோ
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுவது

maa nilathu uyirgal ellaam,மா நிலத்து உயிர்கள் எல்லாம் - (இந்தப்) பெரிய பூ மண்டலத்திலே உள்ள ஜீவ ராசிகளெல்லாம்
veruvu ura,வெருவு உற - (ஜகத் தெல்லாம்) நடுங்கும்படி
konru suttittu,கொன்று சுட்டிட்டு - பர ஹிம்ஸை பண்ணி
eittiya vinaiyar elum,ஈட்டிய வினையர் எலும் - விசேஷமாக ஸம்பாதிக்ப்பட்ட பாவங்களை யுடையவர்களானாலும்
ninnai sindhaiyil thigazha vaithu,நின்னை சிந்தையில் திகழ வைத்து - உன்னை (தங்கள்) நெஞ்சில் விளங்கும்படி வைத்து
maruviya manathar aagil,மருவிய மனத்தர் ஆகில் - த்ருடமான அத்ய வஸாயத்தை உடையராயிருப்பரேயானால் (அவர்கள்)
aruvinai payan adhu uyyaar,அருவினை பயன் அது உய்யார் - (தாங்கள் செய்த) மஹா பாதகங்களினுடைய பலனை அநுபவிக்க மாட்டார்கள்