Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 908 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
908திருமாலை || (அந்த விசேஷ கடாஷம் பெறாமல் அலை பாய்ந்தார்) 37
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும்
ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளிய நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே
thelivu ila kalangal neer soozh,தெளிவு இலா கலங்கல் நீர் சூழ் - (ஒரு காலும்) தெளிவில்லாமல் கலக்கம் மாறாதிருக்கிற காவேரியாலே சூழப் பெற்ற
thiru arangathul,திரு அரங்கத்துள் - கோயிலிலே
oongum,ஓங்கும் - விஞ்சி யிருக்கிற
oli ular thaamae andre,ஒளி உளார் தாமே அன்றே - தேஜஸ்ஸை உடையவரான அழகிய மணவாளனொருனே யன்றே
thandhayum thaayum aavaar,தந்தையும் தாயும் ஆவார் - (நமக்குத்) தகப்பனும் தாயுமாயிருப்பர்;
en thirathu,என் திறத்து - (அவர்) என் விஷயத்தில் (செய்தருள வேண்டுவது)
eliyathu or arulum andrae,எளியது ஓர் அருளும் அன்றே - ஸாமான்யமான ஒரு க்ருபா மாத்திரமே யன்றே?
empiraanaar,எம்பிரானார் - எனக்கு உபகாரகரான அவர்
nam paiyal aliyan ennaar,நம் பையல் அளியன் என்னார் - “நம்முடைய பையலான இவன் நமது கருணைக்கு உரியன்” என்று திருவுள்ளம் பற்றுகிறாரில்லை;
amma o kodiya aare,அம்ம ஓ கொடிய ஆறே - கொடுமையா யிராநின்ற தீ!