திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 907 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
907திருமாலை || (விசேஷ கடாஷம் பண்ண வேண்டும் என்று கதறுகிறார்) 36
மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே
பதவுரை Show / Hide
anru,அன்று - (இந்திரன் பசிக் கோபத்தாலே ஏழு நாள் விடா மழை பெய்வித்த) அக் காலத்திலே
mun,முன் - (பசு முதலியவை மழையினால் கஷ்டமடைவதற்கு) முன்பாகவே
mazhaikku,மழைக்கு - மழையைத் தடுப்பதற்காக
varai aendhum maindhaney,வரை ஏந்தும் மைந்தனே - கோவர்த்தன பர்வதத்தை (கையில் குடையாக) ஏந்திய மிடுக்கை யுடையவனே!
madhura aare,மதுர ஆறே - இனிய ஆறு போல் எல்லார்க்கும் விடாயைத் தீர்ப்பவனே!
uzhaik kandrau pola noakkam udaiyar,உழைக் கன்று போல நோக்கம் உடையவர் - மான் குட்டியின் விழி போன்ற விழியை யுடைய மாதர்களின்
valaiyul,வலையுள் - (அந்த நோக்காகிற) வலையினுள்ளே
pattu,பட்டு - அகப்பட்டு
uzhaikkintreku ennai,உழைக்கின்றேற்கு என்னை - துடிக்கிற என்னை
noakka thozhivadhae,நோக்கா தொழிவதே - கடாக்ஷியாம லிருப்பதும் தகுதியோ?
aadhi moorthi,ஆதி மூர்த்தி - முழு முதற் கடவுளே!
arangamaa nagarulaane,அரங்கமா நகருளானே!-; - பரம பதத்தை விட்டு கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது
என்னுடைய ரஷணம் பண்ண அல்லவாகில் –
இக் கிடைக்கு வேறு ஒரு பிரயோஜனம் உண்டோ

unnai andrae,உன்னை அன்றே - தேவரீரை நோக்கி யன்றோ
azhaikkindraen,அழைக்கின்றேன் - நான் கூப்பிடா நின்றேன்.