திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 898 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
898திருமாலை || (திர்யக் ஜந்துக்களுக்கு உள்ள நன்மையையும் இல்லை என்கிறார்) 27
குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித் தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன் மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே
பதவுரை Show / Hide
kurangugal,குரங்குகள் - வாநர வீரர்கள் (கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் நிறம் பெறுவதற்கு)
malaiyai nookka,மலையை நூக்க - மலைகளைத் தள்ளிக் கொண்டு வர
kulithu purandittu oodi,குளித்து புரண்டிட்டு ஓடி - நீரிலே முழுகி (கரையிலுள்ள உலர்ந்த மணலிலே) புரண்டு ஓடி
tharangam neer adai kal uttra,தரங்கம் நீர் அடைக்கல் உற்ற - அலைக் கிளர்ச்சியை யுடைய கடலைத் தூர்க்கையிலே ஒருப்பட்ட
salam ilaa,சலம் இலா - கபடமற்ற
anilum polen,அணிலும் போலேன் - அணில்களையும் ஒத்திருக்கின்றேனில்லை;
marangal pol valiya nenjam,மரங்கள் போல் வலிய நெஞ்சம் - மரங்களைப் போலே கடிநமான நெஞ்சை யுடையனாய்
vanjanen,வஞ்சனேன் - வஞ்சநையையே தொழிலாக யுடையனாய்
aliyathen,அளியத்தேன் - அருமந்த மநுஷ்யனான நான்
aranganaarkku,அரங்கனார்க்கு - அழகிய மணவாளனுக்கு
nenju thannaal,நெஞ்சு தன்னால் - பாவநா வ்ருத்தியாலுங்கூட
aal seyyaadhae,ஆள் செய்யாதே - அடிமை செய்யாமல்
ayarkinraen,அயர்க்கின்றேன் - அநர்த்தப்படா நின்றேன்.