Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 893 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
893திருமாலை || (பாசுரம் இட்டு பேச ஒண்ணாது என்கிறார்) 22
பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன்
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்
pedhai nenje,பேதை நெஞ்சே - விவேகமற்ற மனமே
pesittrae,பேசிற்றே - (வேதங்களும் வைதிக புருஷர்களும்) பேசின பேச்சுக்களையே
pesal allaal,பேசல் அல்லால் - (நாமும்) பேசுவதே யல்லாமல்
perumai,பெருமை - (எம்பெருமானது) மேன்மையிலே
maasu attrar manathu ulaanai,மாசு அற்றார் மனத்து உளானை - குற்றமற்ற பெரியோர்களின் நெஞ்சில் நித்ய வாஸம் செய்யுமவனே
naam vanangi iruppadhu allaal,நாம் வணங்கி இருப்பது அல்லால் - நாம் வணங்கிக் கொண்டு காலங்கழிக்கலா மத்தனை யொழிய
ondru,ஒன்று - ஏக தேசமும்
unaral aagadhu,உணரல் ஆகாது - அறிய முடியாது;
aasu attrar thangatku allaal,ஆசு அற்றார் தங்கட்கு அல்லால் - உபாயாந்தரப் பற்றாகிற குற்ற மற்றவர்களுக்கு தவிர (மற்றையோர்க்கு)
ariyal aavaanum allan,அறியல் ஆவானும் அல்லன் - அறிய முடியாதவனா யுமிரா நின்றான் (அவன்;)
pesa thaana aavadhu undoh,பேச தான் ஆவது உண்டோ - (அவன் பெருமைக் கீடாகப்) பாசுரமிட்டுப் பேசும் படியா யிராநின்றதோ? நீ சொல்லாய்