Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 887 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
887திருமாலை || (விஷயத்துக்கு தகுதியாக பக்தியை பெருக்கின படியை பேசுகிறார்) 16
சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே
soodhan aay,சூதன் ஆய் - (முதலில்) சூதிலே ஊன்றினவனாய்
kalvan aagi,கள்வன் ஆகி - (பிறகு) களவிலே ஆழ்ந்தவனாய்
thooratharoatu isaindha kaalam,தூர்த்தரோடு இசைந்த காலம் - விஷயாந்தர ப்ரவணரோடே பொருந்தியிருந்த காலத்திலே
maatharaar,மாதரார் - ஸ்திரீகளுடைய
kayal kan yennum,கயல் கண் என்னும் - கயல் போன்ற கண்களாகிற
valaiyul pattu,வலையுள் பட்டு - வலையினுள்ளே அகப்பட்டு
alundhuvaenai,அழுந்துவேனை - அழுந்திக் கிடக்கிற என்னை
podhare endru soll,போதரே என்று சொல்லி - ‘அடா! இப்படி வா’ என்று அருளிச் செய்து
pundhiyil pugandhu,புந்தியில் புகந்து - என் மணஸிலே வந்து புகந்து
thanpaal aadaram peruga vaitha azhagan,தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகன் - தன்னிடத்திலே அன்பை வளரச் செய்த அழகை யுடைய எம்பெருமானது
oor,ஊர் - இருப்பிடம்
arangam andrae,அரங்கம் அன்றே - திருவரங்கமாகும்; (அன்றே ஈற்றசை; தேற்றமுமாம்)