Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 885 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
885திருமாலை || (பகவத் விரோதிகளோடு இதுவரை தமக்கு இருந்த சம்பந்தத்தால் வந்த விடாய் தீர திரு நாமத்தை வாயாரப் பேசுகிறார் ) 14
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே
vandu inam muralum solai,வண்டு இனம் முரலும் சோலை - வண்டுகளின் கூட்டங்களானவை காநம் செய்யா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்,
mayil inam aalum solai,மயில் இனம் ஆலும் சோலை - மயில்களின் கூட்டங்களானவை கூத்தாடா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்
kondal meedhu anavum solai,கொண்டல் மீது அணவும் சோலை - மேகங்களானவை மேலே வந்து படியா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்
kuyil inam koovum solai,குயில் இனம் கூவும் சோலை - குயில்களின் கூட்டங்கள் ஒன்றையொன்று அழையா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்,
andar kon amarum solai,அண்டர் கோன் அமரும் சோலை - தேவர்கட்குத் தலைவனான ஸ்ரீரங்கனாதன் நித்ய வாஸம் பண்ணப் பெற்ற சோலைகளை
ani,அணி - ஆபரணமாக வுடையதுமான
thiru arangam ennaa,திருஅரங்கம் என்னா - ஸ்ரீரங்கம் என்று சொல்ல மாட்டாத
mindar,மிண்டர் - நன்றி யறிவில்லாத மூர்க்கர்கள்
paayndhu unnum soatrai,பாய்ந்து உண்ணும் சோற்றை - மேல் விழுந்து உண்ணுகிற சோற்றை
vilakki,விலக்கி - (அவர்கள் உண்ணக் கூடாதபடி) தடுத்து
neer naaykku idumin,நீர் நாய்க்கு இடுமின் - நீங்கள் (அந்தச்சோற்றை) நாய்க்கு இடுங்கள்.