திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 884 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
884திருமாலை || (எல்லாரும் திரு நாமத்தை அனுசந்தித்து உஜீவிக்கக் கூடுமோ -என்று மநோரதித்தார்) 13
எறியு நீர் வெறி கொள் வேலை மா நிலத்து உயிர்கள் எல்லாம் வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர் கோனை ஏத்த அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில் பொறியில் வாழும் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே
பதவுரை Show / Hide
eriyum neer veri kol velai,எறியும் நீர் வெறி கொள் வேலை - அலைகள் வீசுகின்ற தண்ணீரையும் (புலாலின்) நாற்றத்தையும் கொண்டிருக்கிற கடலினாற் சூழப்பட்ட
maa nilathu,மா நிலத்து - பெரிய இந்தப் பூலோகத்திலுள்ள
uyirkal ellaam,உயிர்கள் எல்லாம் - ஆத்மாக்கள் யாவும்
veri kol poo thulabam maalai,வெறி கொள் பூ துளபம் மாலை - நல்ல பரிமளமுடைய அழகிய திருத் துழாய் மாலையை அணிந்துள்ள
vinnavar konai,விண்ணவர் கோனை - தேவாதி தேவனான திருமலை
aetha,ஏத்த - தோத்திரம் பண்ணுவதற்காகவே (ஏற்பட்டிருக்கின்றன)
arivu ilaa manidhar ellaam,அறிவு இலா மனிதர் எல்லாம் - ((அவ்வாறு துதிப்பது அற்ப ஞானமுடையார்க்கு முடியா விடினும்)
தத்வ ஜ்ஞானம் நிரம்பாத அந்த மனிதர் யாவரும்

arangam endru alaippar aagil,அரங்கம் என்று அழைப்பர் ஆகில் - அபுத்தி புர்வமாகவாகது ஸ்ரீரங்கமென்று
சொல்லுவர்களானால் (அம் மாத்திரத்தாலேயே)

poriyin vaal,பொறியின் வாழ் - பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டு வாழ்கின்ற
naragam ellaam,நரகம் எல்லாம் - (ஞானிகளுக்கு நரகமாகிய ) இப் பிரபஞ்சம் முழுதும்
pul ezhu unthu,புல் எழுந்து - புல் முளைத்து
ozhiyum andae,ஒழியும் அன்றே - பாழாய்ப் போய் விடுமென்றோ