| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 88 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 3 | மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய் பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும் மின்னில் பொலிந்த தோர் கார் முகில் போலக் கழுத்திணில் காறை யொடும் தன்னில் பொலிந்த இருடீ கேசன் தளர்நடை நடவானோ–1-7-3 | மின் கொடியும்,Min kodiyum - கொடி மின்னலும் ஓர் வெண் திங்களும்,Or ven thingalum - அதனோடு சேர்ந்திருப்பதும் களங்கமில்லாததுமான (முழுவதும்) வெண்மையாயுள்ள ஒரு சந்த்ரனும் சூழ்,Sool - (அவ்விரண்டையுஞ்) சுற்றிக் கொண்டிருக்கும் பரிவேடமும் ஆய்,Parivedamum aai - பரி வேஷத்தையும் போல பின்னல்,Pinnal - (திருவரையில் சாத்தின) பொற் பின்னலும் துலங்கும் அரசிலையும்,Thulanggum arasilaiyum - விளங்குகின்ற அரசிலை போல வேலை செய்த ஒரு திருவாபரணமும் பீதகம் சிறு ஆடையோடும்,Peedhagam siru aadaiyodum - (இவ்விரண்டையுஞ் சூழ்ந்த) பொன்னாலாகிய சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும், மி்ன்னில்,Minnil - மின்னலினால் பொலிந்தது,Polinthathu - விளங்குவதாகிய ஓர்,Or - ஒப்பற்ற கார் முகில் போல,Kar mugil pola - காளமேகம் போல கழுத்தினில் காறையோடும்,Kazhuthinil kaaraiyodum - கழுத்திலணிந்த காறையென்னும் ஆபரணத்தோடும் (கூடிய) தன்னில் பொலிந்த,Thannil polintha - (இவ்வாபரணங்கள் திருமேனிச்சுமை என்னும்படி இயற்கையான) தனது அழகினால் விளங்குகின்ற இருடீகேசன்,Irudheekesan - ‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திருநாமமுடைய இவன் தளர்நடை நடவானோ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |