Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 83 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
83பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 9
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்
உளந்தொட் டிரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி–1-6-9
தூணை,Thoona - கம்பத்தை
அவன்,Avan - அந்த ஹிரண்யாஸுரன் (தானே)
தட்ட,Thatta - புடைக்க
ஆங்கே,Aange - (அவன் புடைத்த) அந்த இடத்திலேயே
வான் உகிர்,Vaan Ukir - கூர்மையான நகங்களை யுடைய
சிங்கம் உருஆய்,Singam Uruaai - நரஸிம்ஹ ­மூர்த்தியாய்
வளர்ந்திட்டு,Valarnthittu - வளர்ந்த வடிவத்துடன் தோன்றி
உளம்,Ulam - (அவ்விரணியனது) மநஸ்ஸு (ஒருகால் இவ்விரணியனும் அநுகூலனாகக் கூடுமோ! என்று)
தொட்டு,Thotta - பரிசோதித்துப் பார்த்து (பின்பு)
இரணியன்,Iraaniyan - அவ்விரணியனுடைய
ஒளி,Oli - ஒளி பொருந்திய
மார்பு அகலம்,Maaarbu Akalam - மார்பின் பரப்படங்கலும்
பிளந்திட்ட,Pilandhitta - (நகத்தாற்) பிளந்த
கைகளால் சப்பாணி,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும்.
பேய்,Paey - பூதனையின்
முலை,Mulai - முலையை
உண்டானே,Undaane - உண்டவனே!
சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.