| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 749 | பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 9 | செறி தவ சம்புகன் தன்னை சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட திறல் விளங்கும் இலகுமனை பிரிந்தான் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் உறைவானை மறவாத வுள்ளம் தன்னை வுடையோம் மற்று உறு துயர் அடையோம் அன்றே | செறி தவம், Serri Thavam - மிக்க தபஸ்ஸை யுடையனான சம்புகன் தன்னை, Sambugan Thannai - (சூத்ரசாதியனான) சம்புகனை சென்று, கொன்று, Sendru Konru - (அவனிருக்கு மிடந்தேடிச்) சென்று தலையறுத்து செழுமறை யோன் உயிர் மீட்டு, Sezhumarai Yon Uyir Meettu - சிறந்த ப்ராஹ்மண குமாரனுடைய உயிரை மீட்டுக் கொடுத்து தவத்தோன் ஈந்த, Thavaththon Eentha - அகஸ்திய மா முனிவன் கொடுத்த நிறைமணி பூண் அணியும் கொண்டு, Niraimani Poon Aniyum Konda - பெருவிலையுள்ள ரத்நஹாரமான ஆபரணத்தையும் சாத்தியருளி இலவணன் தன்னை, Ilavanan Thannai - லவணாஸுரனை தம்பியால், Thambiyal - சத்ருக்நனைக் கொண்டு வான் ஏற்றி, Vaan Aetri - வீர ஸ்வர்க்கத்திற் குடியேற்று வித்து முனிவன் வேண்ட, Munivan Venda - துர்வாஸமுனிவனது சாபத்தால் திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான் தன்னை, Thiral Vilangum Ilakkumanai Pirindhan Thannai - பலபராக்கிரமம் விளங்கப் பெற்ற லக்ஷ்மணனை துறந்தவனும் உறைவானை, Uraivaanai - நித்யவாஸம் பண்ணுகிறவனுமான இராமபிரானை மறவாத உள்ளம் தன்னை உடையோம், Maravaadha Ullam Thannai Udaiyom - மறவாமல் எப்பொழுதும் தியானிக்கிற மனத்தையுடைய நாம் மற்று உறு துயரம் அடையோம், Mattru Uru Thuyaram Adayom - இனி (எம்பெருமானை அநுபவிக்கப் பெற்றிலோ மென்று வருந்துன்பத்தை அடையமாட்டோம்) (அன்று, எ – ஈற்றசை) |