| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 747 | பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 7 | குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே | குரை கடலை, Kurai Kadal - கோஷிக்கின்ற கடலை அடல் அம்பால், Adal Ampaal - தீக்ஷ்ணமான அம்பைக் கொண்டு மறுக எய்து, Maruga Eythu - கலங்கும்படி எய்யத் தொடங்கி குலை கட்டி, Kulai Katti - (அதில்) அணை கட்டி அதனால், Adhanal - அந்த அணை வழியாக மறு கரையை ஏறி, Maru Karaiyai Eri - (கடல் கடந்து) அக்கரை சேர்ந்து எரி நெடு வேல் அரக்கரொடும், Eri Nedhu Vel Arakkarodum - (சத்துருக்களை) எரிக்கின்ற நீண்ட வேற்படையை யுடைய இராக்கதர்களும் இலங்கை வேந்தன், Ilankai Vendan - இலங்கைக்கு அரசனான இராவணனும் ஆகிய அனைவர்களுடைய இன் உயிர் கொண்டு, In Uyir Kondu - இனிய உயிரைக் கவர்ந்து (கொன்று) அவன் தம்பிக்கு, Avan Thambikku - அவ்விராவணனது தம்பியான விபீஷணனுக்கு அரசும் இந்து, Arasum Hindu - ராஜ்யத்தைக் கொடுத்து திருமகளோடு, Thirumagalodu - லக்ஷ்மியின் அவதாரமான பிராட்டியுடனே இனிது அமர்ந்த, Inidhu Amarntha - இனிமையாகச் சேர்ந்த செல்வன் தன்னை, Selvan Thannai - எல்லா வகைச் செல்வங்களுமுடையவனும் அரசு அமர்ந்தான், Arasu Amarnthaan - தனது மேன்மை தோன்ற எழுந்தருளி யிருப்பவனுமான அடி சூடும், Adi Soodum - இராமபிரானது திருவடிகளைத் தலைமேற் கொள்ளுதலாகிற அரசை அல்லால், Arasai Allal - அரசாட்சியைப் பெற விரும்புவேனே யன்றி மற்று அரசு, Mattru Arasu - அதற்கு மாறாக ஸ்வாதந்திரியம் பாராட்டுகிற அரசாட்சியை அரசு ஆக எண்ணேன், Arasu Aaga Ennen - ஒரு பொருளாக மதிக்க மாட்டேன். |