Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 744 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
744பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 4
தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே
தொத்து அலர் பூ சுரி குழல், Thoththu Alar Poo Suri Kuzhal - கொத்துக் கொத்தாக மலர்ந்த புஷ்பங்களைச் சூடிய நுனி சுருண்ட கூந்தலை யுடைய
கைகேசி, Kaikesi - கைகேயியினது
சொல்லால், Sollaal - சொல்லின்படி
தொல் நகரம் துறந்து, Thol Nagaram Thurandhu - தொன்று தொட்டுப் பரம்பரையாய் வருகிற ராஜ்யத்தைக் கை விட்டு
துறை கங்கை தன்னை, Thurai Gangai Thannai - கங்கையின் துறையை
பத்தி உடை குகன் கடத்த, Pathi Udai Kugan Kadatha - மஹா பக்தனான குஹப் பெருமான் புணை செலுத்தி யுதவ; (கடந்து)
வனம் போய் புக்கு, Vanam Poi Pukku - காட்டிற்போய்ச் சேர்ந்து
பரதனுக்கு, Barathanukku - (அங்கு வந்த) பரதாழ்வானுக்கு
பாதுகமும் அரசும் ஈந்து, Pathugamum Arasum Eendu - (தனது) மரவடியையும் ராஜ்யத்தையுங் கொடுத்து
சித்திர கூடத்து இருந்தான் தன்னை, Siththira Koodaththu Irundhaan Thannai - சித்ரகூட பர்வதத்தி லெழுந்தருளி யிருந்த ஸ்ரீராமபிராணை
இன்று, Indru - இப்பொழுது (பிற்காலத்தில்)
கண் குளிர காண பெற்ற, Kan Kulira Kaana Petra - கண் குளிரும்படி ஸேவிக்கப் பெற்ற
இரு நிலத்தார்க்கு, Iru Nilaththaar Kku - பெரிய (சிறந்த) பூலோகத்திலுள்ளவர்களுக்கு
இமையவர், Imayavar - நித்யஸூரிகளும்
எத்தனையும் நேர் ஒவ்வார், Ethanaiyum Neer Ovar - சிறிதும் ஸமமாக மாட்டார்கள். (தாம் ஏ–ஈற்றசைகள், தோற்றமுமாம்)