| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 742 | பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 2 | வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின் செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே | வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி, Vandhu Edhirntha Thaadagai Than Uraththai Keerii - செருக்கிவந்து எதிரிட்ட தாடகையினுடைய மார்பைப் பிளந்து வரு குருதி பொழிதர, Varu Kuruthi Pozhithara - ரத்தம் வெளிவந்து சொரியம் படி வல் கணை ஒன்று ஏவி, Val Kanai Ondru Aevii - வலிய ஒப்பற்றதோர் அம்பைச் செலுத்தி மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து, Manthiram Kol Marai Munivan Vellvi Kaaththu - எல்லா மந்திரங்களையும் தம்மிடத்திலே கொண்ட வல் அரக்கர், Val Arakkar - (அந்த யாகத்துக்கு இடையூறு செய்த ஸுபாஹூ முதலிய) வலிய ராக்ஷஸர்களுடைய உயிர் கண்ட, Uyir Kanda - உயிரைக் கொள்ளை கொண்ட மைந்தன், Maindhan - மிடுக்கை யுடையவன் (யாரென்னில்) செம் தளிர்வாய் மலர், Sem Thalirvaai Malar - சிவந்த தளிர்களின் நடுவே மலர்ந்த புஷ்பங்களை யுடையதும் நகை சேர், Nagai Seer - (காண்பவர்) மகிழும்படியான அழகு பொருந்தினதும் செழு, Sezhu - செழுமையை யுடையதுமான தண், Than - குளிர்ந்த சோலை, Solai - சோலைகளை யுடைய அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த, Andhanargal Oru Moovaayiravar Aetha - ப்ரர்மணர் மூவராயிரம் பேர் (திரண்டு துதிக்க) அணி மணி ஆசனத்து இருந்த, Ani Mani Aasanaththu Irundha - அழகிய ரத்நஸிம்ஹாஸநத்திலே வீற்றிருந்த அம்மான் தானே, Ammaan Thaaney - ஸர்வேச்வரனே யாவன்; காண்மின், Kaanmin - அறியுங்கள். |