| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 735 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 6 | அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே அணி சேர் மார்வம் என் மார்வத் திடை அழுந்த தழுவாதே முழுசாதே மோவாது உச்சி கைம்மாவின் நடை அன்ன மென்னடையும் கமலம் போல் முகமும் காணாது எம்மானை என் மகனை இழந்திட்ட இழி தகையேன் இருகின்றேனே | அம்மா என்று உகந்து அழைக்கும், Amma Endru Ughandhu Azaikkum - ஐயா! என்று மகிழ்ச்சி கொண்டு (என்னை) அழைக்கின்ற ஆர்வம் சொல் கேளாதே, Aarvam Sol Kelaadhe - ப்ரீதி விளங்குஞ்சொல்லை (நான்) கேட்கப் பெறாமலும் அணி சேர் மார்வம், Ani Seer Maarvam - ஆபரணங்கள் பொருந்திய (என் மகனது) மார்பு என் மார்வத்திடை அழுந்த, En Maarvathidai Azhundhu - என் மார்பிலே அழுந்தும்படி தழுவாதே, Thazhuvathae - (நான் அவனை) இறுக அணைத்துக் கொள்ளாமலும் முழுசாதே, Muzhusaathae - (அந்த ஆலிங்கந போகக் கடலில்) முழுகாமலும் உச்சி மோவாது, Uchi Moavathu - உச்சியை மோந்திடாமலும் கைம்மாவின் நடை அன்ன மெல் நடையும், Kaimmaavin Nadai Anna Mel Nadaiyum - யானையினது நடை போன்ற (கம்பீரமான அம்மகனது) மென்மையான நடையின் அழகையும் கமலம் போல் முகமும் காணாது, Kamalam Pol Mukamum Kaanathu - தாமரை மலர்போன்ற (அவனது) முகப் பொலிவையும் காணமாலும் எம்மானை என் மகனை இழந்திட்ட, Emmaanai En Maganai Izhandhitta - எமது ஐயனான என் மகனைக் (காடேறப் போக்கி) இழந்து விட்ட இழி தகையேன், Izhil Thagaiyen - இழிவான செயலைச் செய்தவனான நான் இருக்கின்றேனே, Irukkindraen - (இன்னமும் அழிந்திடாமல்) உயிர் வாழ்ந்திருக்கின்றேனே. |