Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 731 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
731பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 2
வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?
வெவ் வாயேன் வெவ் உரை கேட்டு, Veve Vaayaan Veve Urai Kaettu - கொடிய வாயை யுடையேனை என்னுடைய கடுஞ்சொற்களைக் கேட்டு
இரு நிலத்தை வேண்டாதே, Iru Nilaththai Vendaadhe - பெரிய நிலவுலகத்து அரசாட்சியை விரும்பாமலே விட்டிட்டு
விரைந்து, Viraindhu - சீக்கிரமாக
வென்றி மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து, Vendri Mai Vaaya Kaliru Ozhindhu Ther Ozhindhu Maa Ozhindhu - வெற்றியை விளைப்பதான
வனமே மேவி, Vaname Mevi - காட்டையே சேர்ந்து
நெய் வாய வேல் நெடு கண் நேரிழையும், Ney Vaaya Veel Nedhu Kann Nerizhaiyum - நெய்ப்பூசிய நுனியையுடைய வேலாயுதம் போன்ற
இளங்கோவும், Ilankovum - இளைய பெருமாளும்
பின்பு போக, Pinbu Poga - உடன் தொடர்ந்து வர
எவ்வாறு நடந்தனை, Evvaaru Nadandhanai - எங்ஙனம் நடந்து சென்றாயோ!
எம் பெருமான், Em Perumaan - எமது ஐயனே!
என் செய்கேன், En Seigkaen - நான் என் செய்வேன்!