| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 728 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 10 | தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே! காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே! ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ | தேவரையும், Devaraiyum - தேவர்களையும் அசுரரையும், Asuraraiyum - அஸுரர்களையும் திசைகளையும், Thisaigalaiyum - திக்குக்களையும் (அதாவது எல்லா ப்ரதேசங்களையும்) படைத்தவனே, Padaithavaney - ஸ்ருஷ்டித்தவனே யாவரும் வந்து அடி வணங்க, Yavarum Vandu Adi Vananga - ஸகல சேதநரும் வந்து திருவடிகளில் ஸேவிக்கும்படியாக அரங்கம் நகர், Arangam Nagar - ஸ்ரீரங்கத்திலே துயின்றவனே, Thuyinravane - பள்ளி கொண்டிருப்பவனே! காவிரி நல் நதி, Kaviri Nal Nathi - காவேரி யென்கிற சிறந்த நதி யானது பாயும், Payum - ப்ரவஹிக்கப் பெற்ற கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளி யிருக்கிற ஏ வரி வெம் சிலை வலவா, E Vari Vem Silai Valavaa - அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (ச் சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆள வல்லவனே |