| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 726 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 8 | மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே! அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே! கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே! சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ | மலை அதனால் அணை கட்டி, Malai Adhanal Anaik Katti - மலைகளைக் கொண்டு ஸேது பந்தனம் பண்ணி மதிள் இலங்கை அழித்தவனே, Mathil Ilangai Azhithavane - அரணை யுடைத்தான லங்காபுரியைப் பாழ்படுத்தினவனே அலை கடலை கடைந்து, Alai Kadalai Kadaindhu - அலை யெறிகின்ற திருப்பாற்கடலைக் கடைந்து அமரர்க்கு, Amararukku - தேவர்களுக்கு அமுது, Amuthu - அம்ருதத்தை அருளிச் செய்தவனே, Arulich Seithavane - கொடுத்தருளினவனே! கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து, Kalai Valavar Thaam Vaalum Kanapuraththu - ஸகல சாஸ்த்ரங்களையும் அறிந்தவர்கள் வாழ்கிற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற சிலைவலவா, Silaivalavaa - (ஸ்ரீ சார்ங்கமென்னும்) வில்லைச் செலுத்த வல்லவனே! சேவகனே, Sevagane - வீரனே! |