Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 725 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
725பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 7
ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரை அலைக்கும் கண புரத்து என் கரு மணியே!
ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்தி மனே! தாலேலோ
அன்று, Anru - முன்பு மஹாப்ரளயம் வந்த போது
ஆலின் இலை, Aalin Ilai - ஓர் ஆலந்தளிரிலே
பாலகன் ஆய், Paalagan Aayi - குழந்தை வடிவாய்க் கொண்டு
உலகம் உண்டவனே, Ulagam Undavaney - லோகங்களை யெல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கினவனே!
வாலியை கொன்று, Vaalaiyai Konru - வாலியைக் கொலை செய்து
இளைய வானரத்துக்கு, Ilaiya Vaanarathukku - அவனது தம்பியான ஸுகரீவனுக்கு
அரசு அளித்தவனே, Arasu Alithavane - ராஜ்யத்தைக் கொடுத்தவனே!
காலில் மணி, Kaalil Mani - கால்வாய்களிலுள்ள ரத்நங்களை
கரை அலைக்கும், Karai Alaikkum - கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற
கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தளி யிருக்கிற
ஆலி நகர்க்கு, Aali Nagarkku - திருவாலி திருநகரிக்கு
அதிபதியே, Adhipathiye - தலைவனே!
அயோத்திமனே, Ayothimane - அயோத்தி நகர்க்கு அரசனே!