| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 722 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 4 | தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன் மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே! ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ | தாமரை மேல், Thamarai Mel - (திருநாபிக்) கமலத்திலே அயன் அவனை படைத்தவனே, Ayan Avanai Padaiththavane - பிரமனை உண்டாக்கினவனே! தயரதன் தன் மாமதலாய், Thayaradhan Than Mamathalaiy - தசரதனுடைய மூத்த குமாரனே! மைதிலி தன் மணவாளா, Maithili Than Manavala - பிராட்டிக்கு வல்லபனே! வண்டு இனங்கள், Vandu Inangal - வண்டுகளின் கூட்டங்கள் காமரங்கள் இசை பாடும், Kamarangkal Isai Padum - காமரமென்னும் இசையைப் பாடப் பெற்ற கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற ஏ மருவும் சிலை வலவா, E Maruvum Silai Valava - அம்புகள் பொருந்திய (ஸ்ரீசார்ங்கமென்னும்) வில்லை ஆள வல்லவனே “ஏமருவுஞ்சிலை” = ஏ, Emaruvunchilai E - எய்கையிலே, மருவும் – மூட்டாநின்ற, சிலை – வில் என்றும் பொருளாகலாம். வெகு சாதுரியமாய் அடக்கி ஆளத்தக்க வில், Vegu Sadhuriyamaiy Adakki Aalaththakka Vil - என்றவாறு |