Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 722 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
722பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 4
தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ
தாமரை மேல், Thamarai Mel - (திருநாபிக்) கமலத்திலே
அயன் அவனை படைத்தவனே, Ayan Avanai Padaiththavane - பிரமனை உண்டாக்கினவனே!
தயரதன் தன் மாமதலாய், Thayaradhan Than Mamathalaiy - தசரதனுடைய மூத்த குமாரனே!
மைதிலி தன் மணவாளா, Maithili Than Manavala - பிராட்டிக்கு வல்லபனே!
வண்டு இனங்கள், Vandu Inangal - வண்டுகளின் கூட்டங்கள்
காமரங்கள் இசை பாடும், Kamarangkal Isai Padum - காமரமென்னும் இசையைப் பாடப் பெற்ற
கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
ஏ மருவும் சிலை வலவா, E Maruvum Silai Valava - அம்புகள் பொருந்திய (ஸ்ரீசார்ங்கமென்னும்) வில்லை ஆள வல்லவனே
“ஏமருவுஞ்சிலை” = ஏ, Emaruvunchilai E - எய்கையிலே, மருவும் – மூட்டாநின்ற, சிலை – வில் என்றும் பொருளாகலாம்.
வெகு சாதுரியமாய் அடக்கி ஆளத்தக்க வில், Vegu Sadhuriyamaiy Adakki Aalaththakka Vil - என்றவாறு