Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 717 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
717பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 10
வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி
வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க
நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ !
சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் !
கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து
தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து இருந்தேன்
தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே
வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி, Vanjam Meviyai Nenju Udai Paeychchi - வஞ்சனை பொருந்திய நெஞ்சை யுடையளான பூதனை யானவள்
வரண்டு, Varandu - உடம்பு சோஷித்து
எழ, Ezha - (உள்ளுள்ள ரத்தமாம்ஸங்கள) வெளியிற் கொழிக்கும் படியாகவும்
நார் நரம்பு கரிந்து உக்க, Naar Narambu Karinthu Ukka - நார் போன்ற நரம்புகள் கருகி உதிரும் படியாகவும (அவளுடைய)
நஞ்சம் ஆர் தரு சுழி முலை, Nanjam Aar Tharu Suzhi Mulai - விஷந்தீற்றிய கள்ள முலையை
நீ சுவைத்து, Nee Suvaithu - நீ ஆஸ்வாதநம் பண்ணியும்
அருள் செய்து, Arul Seidhu - (என் மேல்) கிருபையினாலே
வளர்ந்தாய், Valarnthai - உயிருடன் வளரப் பெற்றாய்
அந்தோ, Andho - ஆச்சரியம்!
கஞ்சன் நாள் கவர், Kanjan Naal Kavar - கம்ஸனுடைய ஆயுஸ்ஸை அபஹரித்த
கரு முகில் எந்தாய், Karum Mukil Endhai - காளமேகம் போன்ற நாயனே!
முலை வெறிதே சுமந்து, Mulai Veridhae Sumandhu - (நான்) முலையை வியர்த்தமாகச் சுமந்து
கடைப்பட்டேன், Kadaipattain - கெட்டவரிலும் கடைகெட்டவளானேன்;
தஞ்சம் ஒன்று இலேன், Thanjam Ondru Ilaan - (உன்னையொழிய வேற) புகலற்றிராநின்றேன்;
உய்ந்திருந்தேன், Uyandhirundhen - (என்றைக்காகிலு முன்னைக் கண்ணால் காண்போமென்று)பிராணனைப் பிடித்துக் கொண்டு ஜீவிக்கிறேன்;
தக்கது, Thakkadhu - உனக்குத் தகுதியான
நல்ல தாயை, Nalla Thaayai - நல்ல தாயாரை
பெற்றாய், Petrayi - ஸம்பாதித்துக் கொண்டாய்.