Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 715 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
715பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 8
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே
வெண்ணெய் முழுதும் அளைந்து, Venney Muzhudhum Alainthu - வெண்ணெய் குடத்திலுள்ளவளவும கையை விட்டு (அளைந்து)
தொட்டு உண்ணும், Thottu Unnum - எடுத்து உண்கிற
இள முகிழ் தாமரை சிறுகையும், Ila Mukizh Thamarai Sirukaiyum - இளந்தளிரையும் தாமரையையும் போன்ற சிறிய திருக் கைகளும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு, Ezhil Kol Thambu Konda Adippadharku - அழகிய தாம்பாலே அடிக்க (அதற்கு)
எள்கு நிலையும், Elku Nilaiyum - அஞ்சி நிற்கும் நிலையும்
வெண் தயிர் தோய்ந்த செம் வாயும், Venn Thayir Thoyndha Sem Vayum - வெளுத்த தயிர் பூசிய சிவந்த வாயும்,
அழுகையும், Azhugaiyum - அழுவதும்,
அஞ்சி நோக்கும் அ நோக்கும், Anji Nokkum A Nokkum - பயந்து பார்க்கிற அப்பார்வையும்
அணி கொள் செம் சிறு வாய் நெளிப்பதுவும், Ani Kol Sem Siru Vay Nelippadhuvum - அழகிய சிவந்த சிறிய வாய் துடிப்பதும்
தொழுகையும், nan - அஞ்ஜலி பண்ணுகையும் (ஆகிற
இவை, nan - இவற்றையெல்லாம்
கண்ட, nan - நேரில் கண்ணாற்கண்டு அநுபவித்த
அசோதை, nan - யசோதை யானவள்
தொல்லை இன்பத்து, nan - பரமானந்தத்தினுடைய
இறுதி, nan - எல்லையை
கண்டாள், nan - காணப் பெற்றாள்
“அடிப்பதற்கு”, nan - அடிப்ப, அதற்கு எனப் பிரித்துரைத்தலுமாம்;
அழுகையும் தொழுகையும் பரிச்சிந்நர்களுடைய க்ருத்யமிறே. (பரிச்சிந்நர், nan - ஓரளவு பட்டவர்.