| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 714 | பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 7 | குழகனே !என் தன் கோமள பிள்ளாய் கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல் ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா மழலை மென் நகை இடை இடை அருளா வாயிலே முலை இருக்க வென் முகத்தே எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே | குழகனே, Kuzhaganai - எல்லாரோடும் கலக்கும் ஸ்வபாவமுடையவனே! என் தன் கோமளம் பிள்ளாய், En Than Komalam Pillai - என் வயிற்றிற் பிறந்த அழகிய குமாரனே! கோவிந்தா, Kovindaa - கோவிந்தனே! என் குடங்கை யில் மன்னி ஓழுகு பேர், En Kudangai Yil Manni Ozhugu Peer - என்னுடைய குடங்கையிலே பொருந்தியிருந்து வெள்ளமிடாநின்ற மிக்க எழில் இள சிறு தளிர் போல், Ezhil Ila Siru Thalir Pol - அழகை யுடைத்தாயும் மிகவும் இளைசான தளிர் போன்றதுமான ஒரு கையால் ஒரு முலை முகம், Oru Kaiyal Oru Mulai Mukam - ஒரு திருக் கையாலே (என்னுடைய) ஒரு முலைக் காம்பை நெருடா, Neruda - நெருடிக் கொண்டு முலை வாயிலே இருக்க, Mulai Vayile Irukka - மற்றொரு முலையானது (உன்) வாயில் இருக்க இடை இடை, Idai Idai - நடு நடுவே என் முகத்தை மழலை மெல் நகை அருளா, En Mukaththai Mazhalai Mel Nakai Arula - என் முகத்தை நோக்கி புன் சிரிப்பைச் செய்து கொண்டு எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம் தன்னையும், Ezhil Kol Nin Thiru Kan Inai Nokkam Thannaiyum - அழகிய உன் இரண்டு கண்களாலும் பார்க்கிற பார்வையையும் இழந்தேன் இழந்தேன், Izhandhen Izhandhen - ஐயோ! இழந்தேனே! குழகன், Kuzhagan - எல்லாரோடும் கலந்து பரிமாறுவதையே இயல்வாக வுடையவன் கோமளம், Komalam - ஸுகுமாரம். நெருடா, அருளா, Neruda Arula - ‘ செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; நெருடி, அருளி என்றபடி. |