Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 711 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
711பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 4
களி நிலா எழில் மதி புரைமுகமும்
கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும்
தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால்
பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த
பாவியேன் எனது ஆவி நில்லாதே
கண்ணனே களி நிலா, Kannane Kali Nila - ஸ்ரீ கிருஷ்ணனே! ஆநந்தத்தை விளைவிக்கும் நிலாவை யுடைய
எழில் மதி புரை முகமும் திண் கை, Ezil Mathi Purai Mukamum Thin Kai - பூர்ண சந்திரனை ஒத்த திருமுகமும் திண்ணிதான திருக் கைகளும்
மார்வும், Marvum - திரு மார்பும்
திண் தோளும், Thin Tholum - வலிமை பொருந்திய திருத் தோள்களும்
தளிர் மலர் கரு குழல், Thalir Malar Karu Kuzhal - தளிரையும் மலரையும் முடைத்தாய்க் கறுத்த திருக் குழற்கற்றையும்
பிறை அதுவும் தடங்கொள், Pirai Adhuvum Thadankol - அஷ்டமீ சந்திரன் போன்ற திருநெற்றியும் விசாலமான
தாமரை கண்களும், Thamarai Kangkalum - தாமரை போன்ற திருக் கண்களும் (ஆகிய இவை)
பொலிந்த இளமை இன்பத்தை, Polintha Ilamai Inbathai - அழகு பெற்று விளங்கும்படியான யௌவநாவஸ்தையின் போக்யதையை
இன்று, Indru - இப்போது
என் தன் கண்ணால், En Than Kannal - என்னுடைய கண்ணாலே
பருகுவேற்கு, Paruguveyru - நான் அநுபவியா நின்றாலும்
இவள் தாய் என நினைந்த, Ival Thai Ena Ninaindha - (இவள் என்னுடைய) தாய் என்று நினைப்பதற்குத் தகுதியான
பிள்ளைமை, Pillaimai - சைசவப் பருவத்திலுண்டான
அளவு இல் இன்பத்தை, Alavu Il Inbathai - அளவில்லாத ஆநந்தத்தை
இழந்த, Izhanda - அநுபவிக்கப் பெறாமல் இழந்த
பாவியேன் எனது, Paviyen Enathu - பாவியான என்னுடைய
ஆவி நில்லாது, Aavi Nilladhu - உயிரானது தரித்து நிற்க வழி யில்லையே!.