| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 710 | பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 3 | முந்தை நன் முறை அன்புடை மகளிர் முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி எந்தையே ! என் தன் குல பெரும் சுடரே ! எழு முகில் கணத்து எழில் கவரேறே! உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ் விரலினும் கடை கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா நாங்கள் கோன் வாசுதேவன் பெற்றிலனே | அன்பு உடை, Anbu Udai - ப்ரீதியை யுடையவர்களான முந்தை நல் முறை மகளிர், Mundai Nal Murai Makalir - பரம்பரையாக வருகிற நல்ல உறவு முறையை யுடைய பெண்கள் தம் தம் குறங்கிடை, Tham Tham Kurangidai - தங்கள் தங்கள் துடைகளிலே முறை முறை, Murai Murai - க்ரமம் க்ரமமாக இருத்தி, Irudhi - வைத்துக் கொண்டு எந்தையே, Endhaie - “என் அப்பனே! என் தன் குலம் பெருசுடரே, En Than Kulam Perusudare - எங்கள் குலத்துக்குப் பெருத்ததொரு விளக்கானவனே! எழு முகில் கணத்து, Ezhu Mukil Kanathu - (கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய எழில் கவர், Ezil Kavar - அழகைக் கவர்ந்து கொண்ட ஏறே, Ere - “ காளை போன்றவனே!” (என்றிப்படி பலவாறாகத் துதித்து) உந்தையாவன் என்று உரைப்ப, Undaiyavan Endru Uraippa - உன் தகப்பனார் யார்? (காட்டு,) என்றவளவிலே நின், Nin - உன்னுடைய செம் கேழ் விரலினும், Sem Kezh Viralinum - சிவந்து சிறந்த விரலினாலும் கடை கண்ணினும், Kadai Kanninum - கடைக் கண்ணாலும் காட்ட, Kaata - (இன்னார் என் தகப்பனார் என்று) காட்ட (அந்தப் பாக்கியத்தை) நந்தன் பெற்றனன், Nandan Pettran - நந்தகோபர் பெற்றார்; நல் வினை இல்லா நங்கள் கோன், Nal Vinai Illa Nangal Kon - பாக்யஹீநையான என்னுடைய பர்த்தாவான வசுதேவன், Vasudevan - வஸுதேவர் பெற்றிலன், Pettrilan - (நந்தகோபர் பெற்ற பாக்கியத்தைப்) பெறவில்லை. |