Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 707 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
707பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 10
அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை
நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்தூடி
எள்கி வுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான்
குலசேகரன் இன் இசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே
இள ஆய்ச்சிமார்கள், Ila Aaychchimargal - இளமை தங்கிய இடைப் பெண்கள்
அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து, Alli Malar Thirumangai Kelvan Thannai Nayandhu - தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்குக் கொழுநனான கண்ண பிரானை ஆசைப்பட்டு,
எல்லி ஏமப் பொழுதினில், Elli Emapp Pozhudhinil - ராத்ரியின் நடுச் சாமத்திலே
ஊடி, Oodi - ப்ரணய கலஹம் பண்ணி
எள்கி, Elgi - ஈடுபட்டு
உரைத்த, Uraitha - சொன்ன
உரை அதனை, Urai Adhanai - பாசுரங்களை (உட்கொண்டு)
கொல்லி நகர்க்கு இறை, Kolli Nagarkku Irai - கொல்லி என்னும் நகருக்குத் தலைவரும்
கூடல் கோமான், Koodal Koman - மதுரைக்கு அரசருமான
குல சேகரன், Kula Seakaran - குலசேராழ்வார்
இன் இசையில் மேவி, In Isaiyil Mevi - இனிய பண்ணிலே பொருந்த
சொல்லிய, Solliya - அருளிச் செய்த
இன் தமிழ், In Tamil - பரம போக்யமான தமிழிலாகிய
மாலை, Maalai - மாலாரூபமான
பத்தும், Pathum - இப் பத்துப் பாட்டையும்
சொல்ல வல்லார்க்கு, Solla Vallar Kku - ஒத வல்லவர்களுக்கு
துன்பம் இல்லை, Thunbam Illai - ஸம்ஸார துக்கம் அணுகாது.