Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 699 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
699பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 2
கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி
கீழை அகத்து தயிர் கடைய
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று
கள்ள விழியை விழித்து புக்கு
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ
வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் கடைந்திட்ட வண்ணம்
தாமோதரா! மெய் அறிவன் நானே
தமோதரா, Thamodhara - கண்ணபிரானே!
கீழை அகத்து, Keelai Akaththu - (என் வீட்டுக்குக்) கீழண்டை வீட்டில்
கெண்டை ஒண் கண், Kendai On Kan - கயல் போன்று அழகிய கண்களை யுடையளான
மடவாள் ஒருத்தி, Madavaal Oruththi - ஒரு பெண்ணானவள்
தயிர் கடைய கண்டு, Thayir Kadaiya Kandu - (தனியே) தயிர் கடையா நிற்பதைக் கண்டு
நானும், Naanum - நானும் (உன்னோடு கூட)
ஒல்லை கடைவன் என்று, Ollai Kadaivan Endru - சீக்கிரமாக (இத்தயிரைக்) கடைகிறேன்’ என்று (வாயாற் சொல்லி)
கள்ளம் விழியை விழித்து, Kallam Vizhiyai Vizhithu - திருட்டுப் பார்வை பார்த்து
புக்கு, Pukku - (அவளருகே) சென்று சேர்ந்து
வண்டு அமர் பூ குழல், Vandu Amar Poo Kuzhal - வண்டுகள் படிந்த புஷ்பங்களை அணிந்த மயிர் முடியானது
தாழ்ந்து உலாவ, Thazhndu Ulaava - அவிழ்ந்து அசையும் படியாகவும்
வாள் முகம், Vaal Mugam - ஒளி பொருந்திய முகமானது
வேர்ப்ப, Veerppa - வேர்க்கும் படியாகவும்
செம் வாய் துடிப்ப, Sem Vaai Thudippa - சிவந்த அதரமானது துடிக்கும் படியாகவும்
தண் தயிர், Than Thayir - குளிர்ந்த தயிரை
நீ கடைந்திட்ட வண்ணம், Nee Kadainditta Vannam - நீ கடைந்த படியை
நான் மெய் அறிவன், Naan Mey Arivan - நான் மெய்யே அறிவேன்.