| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 695 | பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 8 | தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல் மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா ! உன் புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே ! | மிக்கு இலங்கு, Mikku Ilangu - மிகுதியாய் விளங்குகிற முகில், Mugil - காளமேகம் போன்ற நிறத்தாய், Niraththai - கரிய திருநிற முடையவனே! புண்ணியனே, Punniyane - புண்ய ஸ்வரூபியா யுள்ளவனே! தொக்கு இலங்குயாறு எல்லாம், Thokku Ilanguyaaru Ellam - (ஜல ப்ரவாஹம்) திரண்டு விளங்குகிற நதிகளெல்லாம் பரந்து ஓடி, Parandhu Oodi - (கண்டவிடமெங்கும்) பரவியோடி (முடிவில்) தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத, Thodu Kadale Pukku Andri Puram Nirka Maattadha - ஆழ்ந்த கடலிலே சென்று சேர்ந்தல்லது மற்றோரிடத்தே புகுந்து நிற்க மாட்டா; அவை போல், Avai Pol - அவ்வாறுகள் போல, புக்கு இலங்கு, Pukku Ilangu - (என் நெஞ்சினுள்ளே) புகுந்து விளங்குகிற சீர் அல்லால், Seer Allaal - (உனது) கல்யாண குணங்கள் தவிர (மற்றோரிடத்தில்) புக்கிலன், Pukkilan - ஆழ்ந்திடேன். |