Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 692 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
692பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 5
வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே
வெம் கண், Vem Kan - பயங்கரமான கண்களை யுடைய
திண் களிறு, Thin Kaliru - வலிய (குவலயாபீடமென்னும்) யானையை
அடர்த்தாய், Adartthai - கொன்றவனே!
உன் இணை அடியே அடையல் அல்லால், Un Inai Adiye Adaiyal Allal - உனது உபய பாதங்களையே (நான்) சரணமடைவ தல்லாமல்
எங்கு போய் உய்கேன், Engu Poi Uykeen - வேறு யாரிடத்திற் போய் உஜ்ஜிவிப்பேன்?
எறி, Eri - அலை யெறிகிற
கடல் வாய், Kadal Vaai - கடலினிடையிலே
எங்கும் போய் கரை காணாது, Engum Poi Karai Kaanadhu - நான்கு திக்கிலும் போய்ப் பார்த்து எங்கும் கரையைக் காணாமல்
மீண்டு, Meendu - திரும்பி வந்து
ஏயும், Eyum - (தான் முன்பு) பொருந்திய
வங்கத்தின், Vangathin - மரக் கலத்தினுடைய
கூம்பு ஏறும், Koombu Eerum - பாய் மரத்தின் மீது சேர்கிற
மா பறவை போன்றேன், Maa Paravai Ponderen - பெரியதொரு பக்ஷியை ஒத்திரா நின்றேன்