| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 692 | பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 5 | வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே ! எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால் எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே | வெம் கண், Vem Kan - பயங்கரமான கண்களை யுடைய திண் களிறு, Thin Kaliru - வலிய (குவலயாபீடமென்னும்) யானையை அடர்த்தாய், Adartthai - கொன்றவனே! உன் இணை அடியே அடையல் அல்லால், Un Inai Adiye Adaiyal Allal - உனது உபய பாதங்களையே (நான்) சரணமடைவ தல்லாமல் எங்கு போய் உய்கேன், Engu Poi Uykeen - வேறு யாரிடத்திற் போய் உஜ்ஜிவிப்பேன்? எறி, Eri - அலை யெறிகிற கடல் வாய், Kadal Vaai - கடலினிடையிலே எங்கும் போய் கரை காணாது, Engum Poi Karai Kaanadhu - நான்கு திக்கிலும் போய்ப் பார்த்து எங்கும் கரையைக் காணாமல் மீண்டு, Meendu - திரும்பி வந்து ஏயும், Eyum - (தான் முன்பு) பொருந்திய வங்கத்தின், Vangathin - மரக் கலத்தினுடைய கூம்பு ஏறும், Koombu Eerum - பாய் மரத்தின் மீது சேர்கிற மா பறவை போன்றேன், Maa Paravai Ponderen - பெரியதொரு பக்ஷியை ஒத்திரா நின்றேன் |