| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 687 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 11 | மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன் பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே | கொல் நவிலும், Kol Navilum - (பகைவர்களைக்) கொல்லுதலைப் பயின்ற கூர் வேல், Koora Vel - கூர்மையான வேலாயுதத்தை யுடைய குல சேகரன், Kula Seakaran - குல சேகராழ்வார் மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன், Manniya Than Saaral Vadaveengadathaan Than - நிலை பெற்ற குளிர்ச்சி யுள்ள சாரல்களை யுடைய பொன் இயலும் சே அடிகள், Pon Iyalaum Se Adigal - பொன்போற் சிறந்த சிவந்த திருவடிகளை காண்பான், Kaanbaan - ஸேவிப்பதற்கு புரிந்து, Purinthu - ஆசைப்பட்டு இறைஞ்சி, Irainji - வணங்கி சொன்ன, Sonna - அருளிச் செய்த பன்னிய நூல் தமிழ், Panniya Nool Tamil - ஆராய்ந்த நூல்களிற் கூறிய இலக்கணத்துக்கு இசைந்த தமிழ்ப் பதிகத்தை வல்லார், Vallaar - கற்று வல்லவர் பாங்கு ஆய பத்தர்கள், Paangu Aaya Paththarkal - அப்பெருமான் திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர் அடிவரவு, Adivaravu - ஊன் ஆனாத பின் ஒண் கம்பம் மின் வான் பிறை செடி உம்பர் மன்னிய தரு. |