Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 681 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
681பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 5
கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே
கம்பம், Kambam - தன்னைக் கண்டவர்கட்கு அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற
மதம் யானை, Madhama Yaanai - மதங்கொண்ட யானையினது
கழுத்து அகத்தின் மேல் இருந்து, Kazhuthu Akathin Mael Irundhu - கழுத்தின் மீது வீற்றிருந்து
இன்பு அமரும், Inbu Amarum - நாநாவித ஸுகங்களைப் பொருந்தி அனுபவிக்கும்படியான
செல்வமும், Selvammum - ஐசுவர்யத்தையும்
இவ் அரசம், Iv Arasam - அதற்குக் காரணமான இந்த அரசாட்சியையும்
யான் வேண்டேன், Yaan Vaendein - நான் விரும்ப மாட்டேன்:
எம்பெருமான், Emperumaan - எமது தலைவனும்
ஈசன், Eesan - (எல்லாவுலகுக்கும்) தலைவனுமான பெருமானுடைய
எழில் வேங்கடம் மலை மேல், Ezhil Vengadham Malai Mael - அழகிய திருமலையிலே
தம்பகம் ஆய் நிற்கும், Thambagam Aayi Nirkkum - புதராய் நிற்கும்படியான
உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன்.
கம்பம், Kambam - வடசொல்; கம்பமத யானை (கண்டாரனை வரும்) நடுங்கும்படி மதங்கொண்ட யானை.
தம்பகமாய், Thambagamai - புல் கோரை செடி கொடி முதலியவற்றின் புதர் – ஸ்தம்பம் எனப்படும்.