| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 680 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 4 | ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள் கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே | ஒண் பவளம் வேலை உலவு, On Pavalham Vela Uluvu - ஒளியுள்ள பவழக் கொடிகளைக் கரையிலே கொணர்ந்து கொழித்து (அலைகள்) உலாவுகிற தண் பாற்கடலுள், Than Pargadalul - குளிர்ந்த திருப்பாற்கடலிலே கண் துயிலும், Kan Thuyilum - யோக நித்திரை செய்தருள்கின்ற மாயோன், Maayon - ஆச்சரிய சக்தி யுக்தனான எம் பெருமானுடைய கழல் இணைகள், Kazhal Inaihal - இரண்டு திருவடிகளை காண்பதற்கு, Kaanpadartharku - ஸேவிக்கும் படியாக பண் பகரும் வண்டு இனங்கள், Pan Pakarum Vandu Inangal - இசையையே பேசுகிற வண்டுகளின் கூட்டங்கள் பண் பாடும் வேங்கடத்து, Pan Paadum Vengadaththu - பண்ணிசை பாடப் பெற்ற திருமலையிலே செண்பகம் ஆய் நிற்கும் திரு உடையேன் ஆவேன், Senbagam Aay Nirkum Thiru Udayen Aaven - சண்பக மரமாய் நிற்கும் பாக்கிய முடையேனாகக் கடவேன். |