| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 675 | பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 8 | பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும் இது பேசி என்? ஆயனே அரங்கா என்று அழைகின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே | யாவரும், Yavarum - இவ் வுலகத்தாரடங்கலும் எனக்கு, Enakku - என் வரைக்கும் பேயரே, Peyare - பைத்தியக்காரர்கள் தான்; யானும், Yaanum - (அவர்களிற் காட்டில் விலக்ஷணனான) நானும் எவர்க்கும், Everkum - எவர்களுக்கும் ஓர் பேயனே, Or Peyane - ஒரு பைத்தியக்காரன் தான்; இது, Idhu - இவ் விஷயத்தை பேசி, Peshi - (விரிவாகச்) சொல்வதனால் என், En - என்ன ப்ரயோஜநமுண்டு? ஆயனே, Aayane - ‘ஸ்ரீகிருஷ்ணனே! அரங்கா, Arangaa - ஸ்ரீரங்கநாதனே!’ என்று அழைக்கின்றேன், Endru Azhaiykinren - என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) கூவா நின்றேன்; எம்பிரானுக்கே பேயனாய் ஒழிந்தேன், Em Piranukke Peyanai Ozhindhen - . என்ற பழமொழியின்படி, Endra Pazhamozhiyinbadi - லோகவிஜாதீயரான நீர் பைத்தியக்காரன்; என்று எல்லாராலும் இகழக் கூடியவராயிருக்கின்றீரே! |