| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 666 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 9 | மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே | கண் பனி, Kan Pani - ஆநந்த பாஷ்பமானது மொய்த்து சோர, Moytthu Soora - இடைவிடாமல் சொரியவும் மெய்கள் சிலிர்ப்ப, Meigal Silirppa - உடல் மயிர்க் கூச்செறியவும் உடல் ஏங்கி இளைத்து நின்று, Aengi Ilaitthu Nindru - நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய் எய்த்து, Eyththu - நிலை தளர்ந்து கும்பிடு நட்டம் இட்டு, Kumbidu Nattam Ittu - மஹா கோலாஹலத்தோடு கூடிய நர்த்தனத்தைப் பண்ணி எழுந்து ஆடி பாடி இறைஞ்சி, Ezhunthu Aadi Paadi Irainji - நின்ற விடத்து நில்லாமல் (பல வித) ஆட்டங்களாடிப் பாட்டுகள் பாடி வணங்கி, என் அத்தன், En Aththan - எனக்குத் தந்தையாய் அச்சன், Achchan - ஸ்வாமியான அரங்கனுக்கு, Aranganukku - ஸ்ரீரங்கநாதனுக்கு அடியார்கள் ஆகி, Adiyargal Aagi - அடியவர்களாய் அவனுக்கே, Avanukke - அந்த ரங்கநாதன் விஷயத்திலேயே பித்தர் ஆமவர், Piththar Aamavar - பித்தேறித் திரிகிறவர்கள் பித்தர் அல்லர்கள், Piththar Allargal - பைத்தியக்காரர்களல்லர்; மற்றயார் முற்றும், Mattrayaar Muttum - (பத்தி கார்யமான இந்த வ்யா மோஹமில்லாத) மற்ற பேர்களெல்லாம் பித்தரே, Piththare - பைத்தியக்காரர்கள் தான். |