| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 658 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 1 | தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே | தேட்டரும், Thettarum - (தன் முயற்சியால்) தேடிப் பெறுதற்கு அருமை யானவனும் திறல், Thiral - (தன்னை முற்ற அநுபவிப்பதற்கு உறுப்பான) வலிவைக் கொடுப்பவனும் தேனினை, Theninai - தேன் போல் பரம போக்யனும் தென் அரங்கனை, Then Aranganai - தென் திருவரங்கத்தில் வாழ்பவனும் திரு மாது வாழ் வாட்டம் இல் வன மாலை மார்பனை, Thiru Maathu Vaal Vaatam Il Vana Maalai Maarpanai - பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் செய்தற்கிடமாய் மால் கொள் சிந்தையர் ஆய், Maal Kol Sinthaiyar Aayi - (அவன் திறத்தில்) மோஹங்கொண்ட மனதை யுடையராய் ஆட்டம் மேவி, Aattam Mevi - (அந்த மோஹத்தாலே நின்ற விடத்தில் நிற்க மாட்டாமல்) ஆடுவதிலே ஒருப்பட்டு அலர்ந்து அழைத்து, Alarnthu Azhaithu - (பகவந்நாமங்களை) வாய் விட்டுக் கதறி கூப்பிட்டு அயர்வு எய்தும், Ayirvu Eydhum - இளைப்படைகின்ற மெய் அடியார்கள் தம், Mei Adiyaargal Tham - உண்மையான அன்புடைய பாகவதர்களின் ஈட்டம், Eettam - கோஷ்டியை கண்டிட கூடும் ஏல், Kandida Koodum Ael - ஸேவிக்கப் பெறுவோமாகில் அது காணும் கண் பயன் ஆவது, Adhu Kaanum Kan Payan Aavathu - கண் படைத்ததற்குப் பயன் அதுவே யன்றோ! ‘ஸ்ரீ ய:பதியே!, Sri Ya Padhiye - ஸ்ரீ மந்நாராயணனே!’ என்றிப்படி பல திரு நாமங்களைக் கூறி யழைத்து, மேவி = மேவுதல், Mevi Mevuthal - விரும்புதல்: “கண்டிடக் கூடு மேல்” என்றது, Kandidak Koodu Mel Endrathu - இத்தகைய மெய்யடியார்களை இந் நிலவுலகத்தில் |