| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 649 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 3 | எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன் அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே | எம் மாண்பின் அயன், Em Maanpin Ayan - ஸர்வ விதத்தாலுமுண்டான மாட்சிமையை யுடைய நான்முகன் நான்கு நாவினாலும் (தனது), Naanthu Naavinaalum Thanadhu - நாலு நாக்கினாலும் எடுத்து, Eduthu - சொற்களை யெடுத்து ஏத்தி, Aethi - துதித்து ஈர் இரண்டு முகமும் கொண்டு, Eer Irandu Mukhamum Kondu - நான்கு முகங்களாலும் இனிது ஏத்தி, Inidhu Aethi - இனிமையாக (வேதங்களாலே) ஸ்தோத்திரம் பண்ணி எழில் கண்கள் எட்டினோடும், Ezhil Kangal Ettinodum - அழகிய எட்டு கண்களினாலே எம் மாடும், Em Maadum - எல்லாப் பக்கங்களிலும் தொழுது இறைஞ்ச நின்ற, Thozhudhu Irajinja Nindra - நன்றாக ஸேவிக்கும்படி அமைந்த செம் பொன், Sem Pon - செவ்விய பொன் போல் (விரும்பத்தக்க வடிவுடைய) ஸ்வாமியான தன்னுடைய கமலம் மலர் கொப்பூழ், Kamalum Malar Koppuzh - தாமரைப் பூவை யுடைய திருநாபி யானது தோன்ற, Thondra - விளங்கும்படி அம்மான் தன், Ammaan Than - பெரிய பெருமாளுடைய அடிஇணை கீழ், Adiinai Keel - திருவடிகளின் கீழே அலர்கள் இட்டு, Alarkal Ittu - புஷ்பங்களை ஸமர்ப்பித்து அங்கு அடியவரோடு, Angu Adiyavarodu - அங்குள்ள கைங்கர்ய பரர்களோடு கூட அணுகும் நாள் என்று கொல், Anugum Naal Endru Kol - நெருங்கி வாழ்வது என்றைக்கோ? எம் மாண்பின், Em Manpin - துதிப்பதற்கு உறுப்பான வாக்தேவியை எப்போதும் தன் வசமாகக் கைக் கொண்டிருக்கும் |