Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 643 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
643நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 7
பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே
பொருத்தம் உடைய நம்பியை, Porutham Udaya Nambiyai - பொருத்தமுடைய ஸ்வாமியாய்
புறம் போல் உள்ளும் கரியானை, Puram Pol Ullum Kariyaanai - உடம்பு போலே உள்ளமும் கறுத்திரா நின்றவனாய்
கருத்தை பிழைத்து நின்ற, Karuthai Pizhaithu Nindra - நான் எண்ணும் எண்ணத்தைத் தப்பி நிற்பவனாய்
அக் கரு மா முகிலை, ak karu maa mukilai - கறுத்துப் பெருத்த முகில் போன்றவனான அக் கண்ணபிரானை
கண்டீரே?, Kandire? - கண்டீரே?
அருத்தி, Aruthi - விரும்பப் பெறுகின்ற
தாரா கணங்களால், Thaaraa Kanangalal - நக்ஷத்ர ஸமூஹங்களாலே
ஆர பெருகு, Aara Perugu - மிகவும் நிறைந்திருந்துள்ள
வானம் போல், vanam pol - ஆகாசம் போல்
வானம் போல் விருத்தம் பெரிது ஆய், Virutham Peridhu Aay - பெருங்கூட்டமாய்
வருவானை, varuvanai - எழுந்தருளா நின்ற அப் பெருமானை
விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே