Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 635 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
635நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 9
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே
கொம்மை முலைகள், Kommai Mulaigal - (எனது) கிளர்ந்த பருத்த முலைகளினுடைய
இடர் தீர கோவிந்தற்கு ஓர குற்றவேல், Idar Theera Govindharku Ora Kutravel - குமைச்சல் தீரும்படி கண்ணபிரானுக்கு அந்தரங்கமான கைங்கரியத்தை
செம்மை உடைய திருமார்விலே, Semmai Udaiya Thirumaarvile - (அன்பர்கள் அணைவதற்கென்றே ஏற்பட்டிருக்கையாகிற) செவ்வையை யுடைத்தான் (தனது) திருமார்பிலே
சேர்த்தானேலும், Serthaanelum - (என்னை அவன்) சேர்த்துக் கொண்டானாகில்
நன்று, Nandru - நல்லது
ஒரு நான்று, Oru Naandru - ஒரு நாள்
இம்மைப் பிறவி செய்யாதே இனி போய், Immai Piravi Seyaadhe Ini Poi - இந்த ஜன்மத்திலே செய்யப் பெறாமல் இந்தப் பிறவி கழிந்த பின்பு வேறொரு தேச விசேஷத்திலே போய்
செய்யும், Seiyum - செய்யக் கூடியதான
தவந்தான் ஏன்?, Thavandhaan Yen? - தபஸ்ஸு ஏதுக்கு?
முகம் நோக்கி, Mugam Nokki - என் முகத்தைப் பார்த்து
மெய்ம்மை சொல்லி, Meimmai Solli - மெய்யே சொல்லி
விடை தான் தருமேல், Vidai Thaan Tharumel - “நீ எனக்கு வேண்டாம்போ“ எனறு தள்ளி விட்டமை தோன்ற விடை கொடுப்பானாகில்
மிக நன்று, Miga Nandru - அது உத்தமோத்தமம்