Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 625 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
625நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 9
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நமனை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்
கிளி, kili - (நான் வளர்த்த) கிளியானது
கூட்டில் இருந்து, kootil irundhu - கூட்டில் இருந்து கொண்டு
எப்போதும், epodhum6 - ஸதா காலமும்
கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும், Govindhaa govindhaa endru azhaikkum - கோவிந்தா கோவிந்தா வென்று கூவா நின்றது
ஊட்டு கொடாது, Ootu kodaadhu - உணவு கெடாமல் (பட்டினி கிடக்கும்படி)
செறுப்பன் ஆகில், Serupan aagil - துன்பப் படுத்தினேனாகில்
உலகு அளந்தான் என்று, Ulagu alandhaan endru - உலகளந்த பெருமானே! என்று
உயர கூவும், Uyara koovum - உரக்கக் கூவா நின்றது! (இந்தத் திருநாமங்கள் என் காதில் விழும் போதே என் சரீரம் புறப்படக் கிளம்புகின்றது ஆகையால்)
நாட்டில், Naatil - இவ் வுலகில்
தலை பழி எய்தி, Thalai pazhi eythi - பெருத்த அபவாதத்தை ஸம்பாதித்து
உங்கள் நன்மை இழந்து, Ungal nanmai izhandhu - உங்களுடைய நல்ல பேரைக் கெடுத்துக் கொண்டு
தலை இடாதே, Thalai idaathe - (பிறகு ஒருவரையும் முகம் நோக்க மாட்டாமல்) தலை கவிழ்ந்து நிற்க வேண்டாதபடி
சூடு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும், Soodu uyar maadangal soozhndhu thondrum - தலை யுயர்ந்த மாடங்களால் சூழப்பட்டு விளங்குகின்ற
துவராபதிக்கு, Thuvarapadhikku - த்வாரகையிலே
என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்