Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 624 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
624நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 8
கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்
கன்று இனம், Kanru inam - கன்றுகளின் திரள்கைள
மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான், Meykkalum meykka petran - மேய்ப்பதையே தொழிலாகப் பெற்றவனுமானான
காடு வாழ் சாதியும் ஆக பெற்றான், Kaadu vaazh saathiyum aaga petran - (வீட்டை விட்டுக் கழிந்து) காட்டிலேயே தங்கி வாழும்படியான சாதியிலும் பிறக்கப் பெற்றான்
பற்றி, patri - வெண்ணெய் களவில் பிடிபட்டு
உரலிடை, Uralidai - உரலிலே
ஆப்பும் உண்டான், aapum undaan - கட்டுப்படவும் பெற்றான் (ஸௌலப்ய காஷ்டையான இச் செயல்கள்)
பாலிகாள், Paalikaal - குணத்தையும் குற்றமாகக் கொள்ளும் பாவிகளே!
உங்களுக்கு, Ungalukku - உங்களுக்கு
ஏச்சுக் கொலோ, echchu kolo - தூஷணத்துக்கோ உடலாயிற்று? (இதுவரையில் நீங்கள் இழிவாகச் சொன்னவை நிற்க இனியாகிலும்)
கற்றன பேசி வசவு உணாதே, Katrana pesi vasavu unaadhe - நீங்கள் கற்ற கல்விகளைப் பேசி (என்னிடத்தில்) வசவு கேட்டுக் கொள்ளாமல்
காலிகள் உய்ய மழை தடுத்து, Kaaligal uyya mazhai thaduthu - பசுக்கள் பிழைக்கும்படி பெரு மழையைத் தடை செய்து
கொற்றம் குடை ஆக, Kotram kudai aaga - வெற்றிக் குடையாக
ஏந்தி நின்ற, endhi nindra - (கண்ண பிரனால்) தரிக்கப்பட்ட
கோவர்தனத்து, Govardhanathu - கோவர்த்தன மலையினருகே
என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்