Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 563 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
563நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 8
இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
இம்மைக்கு, Immaikku - இப் பிறவிக்கும்
ஏழ் ஏழ் பிறவிக்கும், Ezh Ezh Piravikum - மேலுள்ள பிறவிகள் எல்லாவற்றிற்கும்
பற்று ஆவான், Patru Aavaan - சரண்யனா யிருப்பவனாய்
நம்மை உடையவன், Nammai Udaiyavan - நமக்கு சேஷியாய்
நம்பி, Nambi - ஸகல கல்யாண குண பரிபூர்ணனாய்
நாராயணன், Narayanan - நாராயணனான கண்ண பிரான்
செம்மை உடைய திரு கையால், Semmai Udaiya Thiru Kaiyaal - செவ்விய (தனது) திருக் கையினால்
தாள் பற்றி, Thaal Patri - (எனது) காலைப் பிடித்து
அம்மி மிதிக்க, Ammi Midhikka - அம்மியின் மேல் எடுத்து வைக்க
நான் கனாக் கண்டேன், naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்